கல்யாணத்தை நிறுத்திய பாக்யா, ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுத்த எழில் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா அமிர்தாவை கூட்டிக்கொண்டு வந்து எழில் இந்த பொண்ணைத்தான் விரும்பினான் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி உனக்கு என்ன பைத்தியமா எழில் விருப்பப்பட்டு தானே இது எல்லாமே நடக்குது என சொல்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஈஸ்வரி நான் அன்னைக்கே உங்க வீட்டுக்கு வந்து என்ன சொன்னேன் இதெல்லாம் செட்டாகாது எங்க பையனுக்கு உங்க பொண்ணு கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு தானே வந்தேன் இப்ப என்ன எல்லாரும் சேர்ந்து நாடகம் போடுறீங்களா என பேச பாக்கியா அவங்கள எதுவும் சொல்லாதீங்க நான் தான் உங்களை கிளம்பி வர சொன்னேன் என கூறுகிறார்.

இதுக்கு மேலயும் பேச என்ன இருக்கு வா வர்ஷினி போகலாம் இன்னும் அவமானப்பட முடியாது என வர்ஷிணியின் அப்பா சொல்ல ஈஸ்வரி கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும் எழில் வர்ஷினி கழுத்தில் தான் தாலி கட்டுவான் என சொல்கிறார். பாக்கியா நீங்க ஒரு நாளுக்காக பாக்கறீங்க ஆனா இந்த கல்யாணம் நடந்தா ரெண்டு பேருமே வாழ்நாள் முழுக்க சந்தோஷமா இருக்க முடியாது.

ஒரு பொண்ணை மனசுல நினைச்சுட்டு என் பையனால உங்க பொண்ணோட எப்படி சந்தோஷமாக வாழ முடியும் என கேட்கிறார். மேலும் பாக்கியா இல்லை கூட்டி வந்து சொல்லு இப்பயாவது உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு என நிற்க வைக்க எழில் பேசாமல் அமைதியாக இருக்கிறார். ஈஸ்வரி சொல்லுடா, எனக்கு வர்ஷினி கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லு என பேச அப்பவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

பணத்துக்காக ஒரு பொண்ணு நீ கல்யாணம் பண்ணிக்குவியா? நம்பிக்கை துரோகத்தினால் நம்ம வீட்ல என்ன பிரச்சனை எல்லாம் நடந்தது என்று உனக்கு தெரியாதா? ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை கொடுத்திட்டு இப்படி நெருக்கதியா நிற்க வைத்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவியா?

நான் தானே உன்னை வளர்த்தேன்? உன்னால எப்படி இப்படி ஒரு முடிவு எடுக்க முடிந்தது என பாக்யா கேட்க, எழில் அமிர்தாவின் பக்கம் போய் நின்று நான் அமிர்தாவை தான் காதலிக்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தான் இந்த முடிவை எடுத்தேன், நான் எடுக்கிற முடிவு சரியா தவறான்னு யோசிக்காமல் தான் எடுத்தேன். நான் அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்குவேன்னு வாக்கு கொடுத்து இருந்தேன் என சொல்ல ஈஸ்வரி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

பிறகு வர்ஷினியின் அப்பா வர்ஷினியை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். பாக்கியா கல்யாணத்துக்கு ஆன செலவை நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என வாக்கு கொடுக்கிறார். கோபி எல்லாரும் பிடித்தவர்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் சந்தோஷமா வாழறாங்களா? கிடைச்ச வாழ்க்கையை சந்தோஷமாக வாழவில்லையா?

இப்போ உன்னால இந்த கல்யாணம் நின்னு போச்சு அவனுடைய கெரியரும் நாசமா போச்சு இப்போ என்ன பண்ண போற என கேள்வி எழுப்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 08-02-23
jothika lakshu

Recent Posts

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் தகவலை கொடுத்த நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…

5 hours ago

ஏகே 54 என்பது தான் இயங்க ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி.. பார்த்திபன் பேச்சு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

5 hours ago

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

9 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

9 hours ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

12 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

1 day ago