BaakiyaLakshmi Serial Episode Update 05-08-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா கோபி இடம் சாரி டாடி என்னை மன்னிச்சுடுங்க என்னால தான் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு என்று சொல்ல உனக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லமா நான் தான் தப்பு பண்ணிட்டேன் என்னால தான் உன் வாழ்க்கையை இப்படி ஆயிடுச்சு இது மட்டும் இல்லாம இந்த குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லாருக்கும் என்னால தான் கஷ்டம் என சொல்லி இனியாவுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு என்று சொல்லி…
பாக்கியா அவருடைய இரண்டு ரெஸ்டாரன்டையும் திரும்பி பெற்றது போலவும் அதில் பூஜை ஏற்பாடுகள் செய்து ஆட்களை வர வைத்து பூஜை பண்ணி வேலைகளை ஆரம்பிக்கிறார். இனியா பாக்யாவிடம் இப்போது தான் அம்மா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ இழந்த இரண்டு ரெஸ்டாரன்ட்டும் உனக்கு வந்துடுச்சு என்று சொல்லுகிறார்.செல்வியும் இப்பதாக உன்ன பார்க்கவே நிம்மதியா இருக்கு ஆனா என்ன இதுக்கப்புறம் நீ ஓடிக்கொண்டே இருப்ப என்று சொல்ல எனக்கு ஓடிக்கொண்டே இருக்கிறதுல தான் சந்தோஷம் என சொல்லுகிறார் பிறகு மீட்டிங் ஆரம்பிக்கலாமா என்று பேசிவிட்டு என்னென்ன சமைக்கலாம் என்னென்ன மேலும் மாத்தலாம் என்று அனைவரிடமும் பேசுகிறார்.
இனியா பாக்யாவை வியந்து பார்த்துக் கொண்டிருக்க என்னாச்சுடி என்று கேட்கிறார் ஒன்னும் இல்லம்மா ஒரு குடும்பத்தோட சப்போர்ட் இருந்தா எவ்வளவு பிரச்சனையும் என்றாலும் சமாளிக்கலாம் என்று நிதிஷ் பிரச்சனை வரும்போது நான் புரிஞ்சுகிட்டன் ஆனா ஒரு குடும்பமா நான் உங்களுக்கு எந்த சப்போர்ட்டும் பண்ணலாமா என்று வருத்தப்பட முடிந்த கதை எல்லாம் இப்ப எதுக்கு என்று கேட்கிறார். இதுக்கு மேல நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்மா என்று சொல்ல அப்படியான ஒரு ஸ்வீட் செஞ்சு எடுத்துட்டு வரேன் அதை சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு போகிறார். மறுபக்கம் கோபி ஈஸ்வரி எழில் இனியா என நால்வரும் உட்கார்ந்து கொண்டிருக்க அமிர்தாவிடம் இதுக்கு அப்புறம் சும்மா இங்கேயும் அங்கேயும் போய் வந்துட்டு இருக்காத என்று ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து பாக்கியா வீட்டுக்கு வர வழியில் எல்லாம் வாந்தி எடுத்துக்கிட்டே இருந்திருக்கா என்று சொல்லுகிறார் 3 மாசம் தானே ஆகுது அத்தை என்று சொல்ல தற்போது அமிர்தா கர்ப்பமாக இருக்கும் செய்தி வந்துள்ளது.
ஈஸ்வரி ஆம்பள புள்ள தான் பிறக்கும் என சொல்ல எந்த குழந்தையா இருந்தா என்ன பாட்டி என எழில் சொல்லுகிறார். உடனே என் கனவுல முருகர் வந்தாரு அப்ப ஆம்பள புள்ளையா தான் இருக்கும் என பேசிக்கொண்டு இருக்க ஈஸ்வரி அமிர்தாவை ரெஸ்ட் எடுக்க சொல்ல நான் கொஞ்ச நேரம் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன் என சொல்லுகிறார் உடனே வாந்தி வர அமிர்தா எழுந்து ஓடி சென்று விடுகிறார்.பிறகு சரி நான் வேலைக்கு போகிறேன் என இனி அவன் கிளம்பி விடுகிறார். அனைவரும் டைனிங் டேபிளில் ஜெனி சமைப்பதை பார்த்து பயந்து கொண்டு உட்கார்ந்து இருக்கின்றனர். ஜெனி டேஸ்ட் பண்ண அமிர்தாவிடம் கொடுக்க வேண்டாம் அவ பிரக்னண்டா இருக்கா உயிர் வாழனும் என்கிட்ட குடு என்று சொல்லி டெஸ்ட் பண்ண குழம்பு டேஸ்டாக இருப்பதாக ஈஸ்வரி சொல்லுகிறார் பிறகு இனியாவும் டேஸ்ட் பண்ணி சூப்பரா இருக்கு அக்கா என்று சொல்லுகிறார் கொஞ்ச நேரத்தில் பாக்யா போன் பேசிக்கொண்டே வீட்டுக்கு வருகிறார்.
என்ன விஷயம் என்று கேட்க ஆகாஷ் சப் கலெக்டரா காஞ்சிபுரத்துக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆகி இருக்கானா என்று சொல்ல குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றன. என்ன இனியா ஒன்னும் சொல்ல மாட்டேங்குற என்று சொல்ல எனக்கு முன்னாடியே தெரியுமா அவன் எனக்கு டெக்ஸ்ட் பண்ணிட்டான் என்று சொல்ல சரி என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே ஈஸ்வரி நம்ம ஆகாஷுக்கு இனியவை கல்யாணம் பண்ணி வச்சிடலாமா என்று கேட்க பாக்யா அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லுகிறார் இனியா இதை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்க ஏன் சரிப்பட்டு வராது என ஈஸ்வரி கேட்கிறார் இப்போதைக்கு அவங்க பிரண்ட்ஸா தான் பழகிட்டு இருக்காங்க அவங்க அவங்களுக்கு அந்த நேரத்துல அவங்க வாழ்க்கை துணையே தேர்ந்தெடுத்துப்பாங்க இப்போதைக்கு நம்ம குழப்பம் பண்ண வேண்டாம் என முடிவு எடுக்கிறார்.
மறுநாள் காலையில் செல்வியும் ஆகாஷ் ஸ்வீட் எடுத்துக் கொண்டு பாக்யா வீட்டுக்கு வர குடும்பத்தினர் என்ன பேசுகின்றனர்?அதற்கு செல்வி என்ன பதில் சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…