குழப்பத்தில் இனியா, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆகாஷ் படித்துக் கொண்டிருக்கிற செல்வி வீட்டுக்கு வருகிறார். கெரியரில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து சாப்பிடறியா என்று கேட்க இல்லமா அப்ரம் சாப்பிடறேன் என்று சொல்லுகிறார் உங்க அப்பா எங்க போனாரு வரலையா என்று கேட்க இல்லை என்று சொல்லி எங்க குடிச்சிட்டு விழுந்திருக்கிறாரோ தெரியல என்று சொல்லிவிட்டு செல்வி சோகமாக உட்கார்ந்து இருக்க ஆகாஷ் என்னம்மா ஆச்சு உன் முகமே சரியில்ல என்ன பிரச்சனை என்று கேட்க இனிமே நீ படிக்கிற வேலையை மட்டும் பார் ஆகாஷ்.

நம்மளுக்கு அதுதான் ரொம்ப முக்கியம் இனிமே இனியா பாப்பாவை பார்க்கிறதோ பேசுறது வச்சுக்காத என்று சொல்ல பாக்யா ஆன்ட்டிக்கு சத்தியம் பண்ணி கொடுத்ததில் இருந்து அப்படித்தான்மா இருக்கேன் என்று சொல்லுகிறார் அதற்கு செல்வி இனியாவோட நம்பர் வச்சிருந்தா அதை டெலிட் பண்ணிடு என்று சொல்லிக் கொண்டே இருக்க என்னம்மா ஆச்சு என்று கேட்கிறார் இனியாவுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி இருக்காங்க என்று சொல்ல ஆகாஷ் கண்கலங்கி அழுகிறார். யாருமா சொன்னது என்று கேட்க பாக்யா அக்கா சொல்லுச்சு இனியா கஷ்டப்படுவா ரெஸ்டாரன்ட் பிரச்சனை வீடுன்னு சொன்னார்களே தவிர ஆகாஷ் கஷ்டப்படுமான்னு அக்கா ஒரு வார்த்தை கூட சொல்லல, ஆயிரம் தான் நான் அவங்க வீட்ல வேலை செஞ்சு இருந்தாலும் அவங்க வீட்ல ஒரு ஆள் ஆக முடியாது நீ நல்லா படி ஆகாஷ் நம்ப தலை குனிஞ்சு நிக்குற இடத்துல படிப்பால மட்டும்தான் தலை நிமிர்த்து வந்திருக்க முடியும் நீ படிச்சு ஒரு நல்ல வேலைக்கு போ என்று அட்வைஸ் பண்ணி விட்டு சென்று விடுகிறார் ஆனால் ஆகாஷ் கண்கலங்கி உடைந்து அழுகிறார்.

மறுபக்கம் இனியாவும் பாக்யாவும் படுத்துக் கொண்டிருக்க இனியா செழியன் மற்றும் கோபி இருவரும் பேசியதை நினைத்து யோசித்துக் கொண்டே இருக்க தூங்கலையா இனியா என்று கேட்கிறார் பாக்யா இல்லம்மா அண்ணனும் அப்பாவும் என்னை பிரைன் வாஷ் பண்ற மாதிரியே பேசுறாங்க அவங்க பேசுறது எல்லாம் நீ எதுக்கு எடுத்துக்குற என்று கேட்கிறார் அவர் ஏதாவது சொல்லும் போதே நெஞ்சு வலிக்குதுன்னு சொல்றது எனக்கு ரொம்ப பயமா இருக்குது என்று சொல்ல அது மட்டும் இல்லாம ஆகாஷ் ரொம்ப பாவம் அவனுக்கு நான் ஹோப் கொடுத்துட்டு இந்த மாதிரி ஒரு தப்பு பண்ண கூடாதுல என்று சொல்ல பண்ணக்கூடாது என்று பாக்கியா சொல்லுகிறார்.ஆனா இப்போதைக்கு ஆகாஷ் கல்யாணம்ன்றது எதுவுமே பேசாம உனக்கு என்ன தேவையோ அதை பண்ணு நல்லா படி என்று சொல்ல இதுக்கு அப்பாவும் பாட்டியும் சம்மதிப்பாங்களா என்று கேட்கிறார் அவங்க எதுக்கு சம்மதிக்கணும் இப்ப நாம மசாலா கம்பெனி ஆரம்பிச்சு இதுவரைக்கும் பொழுது அவர்களுடைய எதிர்ப்பு மீறி தான் என்று சொல்லுகிறார். உன்னோட கல்யாண வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை நீ தான் பேஸ் பண்ணனும் நெஞ்சு வலி என்று சொல்ற உன் அப்பாவோ இல்ல பிளாக்மெயில் பண்ற உன்னோட பாட்டியோ வர மாட்டாங்க என்று சொல்ல இப்ப நான் என்னம்மா பண்ணட்டும் என்று கேட்கிறார் இப்ப எனக்கு இந்த கல்யாணம் தேவையில்லை என்று சொல்ல இனியா சரி அவங்ககிட்ட சொல்லி விடுகிறேன் என்று சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் காலில் செழியன் இருக்க கிச்சனில் பாக்யா மற்றும் எழில் காபி குடித்துக் கொண்டிருக்கின்றனர் அந்த நேரம் பார்த்து இனியா வந்து உட்கார பாக்யா காபி கொடுக்கிறார் எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் இனியா தைரியமா இரு என்று சொல்லிக் கொண்டிருக்க செழியனுக்கு போன் வருகிறது கோபி முடியாமல் இருப்பதாகவும் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருப்பதாகவும் சொல்ல செழியன் பதட்டப்பட்டு பேசிய உடனே இவர்கள் அனைவரும் என்ன விஷயம் என்று கேட்க அப்பாவ அட்மிட் பண்ணி இருக்காங்களாம் முச்சு திணறல் வந்திருக்கு என்று சொன்னவுடன் இனியா பதறிப் போகிறார் ஆனால் பாக்கியம் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத செழியா இது கூட உங்க அப்பாவோட நடிப்பா இருக்கும் என்று சொல்ல என்னம்மா பேசிக்கிட்டு இருக்க நீ. நான் போக போறேன் இஷ்டம் இருந்தா வருவாங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே இனியாவும் நானும் போயிட்டு வரேன் என்று கிளம்ப அவங்க என்ன நடக்கிறது? கோபி என்ன சொல்லுகிறார்? இனியாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyBaakiyaLakshmi Serial Episode Update 04-04-25aLakshmi Serial Episode Update 04-04-25
jothika lakshu

Recent Posts

Kattalan Tamil Trailer Cubes

Kattalan Tamil Trailer Cubes | Pepe | Shareef Muhammed | Paul |Ravi Basrur | Dushara…

4 hours ago

“நயன்தாராவுக்கு கோபம் வந்தால் பயங்கரம்!” – விக்னேஷ் சிவன் சிரிப்பூட்டும் பகிர்வு

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல தம்பதிகள். இவர்களுக்கு தற்போது இரட்டை…

4 hours ago

‘ஜனநாயகன்’ சர்ச்சைக்கு பின்… ரஜினியின் ‘ஜெயிலர் 2’ காட்சிகளும் கசிவு!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முழுக் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைத்…

4 hours ago

ரூ.1 கோடி இழப்பீடு வழக்கு: தமன்னாவின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

நடிகை தமன்னா சந்தோஷ் பாட்டியா தாக்கல் செய்திருந்த ரூ.1 கோடி இழப்பீடு கோரும் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல்…

5 hours ago

அஜித் பிறந்தநாளில் ‘பில்லா’ மீண்டும் திரையரங்கில்!

நடிகர் அஜித் குமார் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘பில்லா’ (2007), மீண்டும் ரசிகர்களை கவர திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக வருகிறது.…

5 hours ago

Vaadaa Thondaa Video Song

Vaadaa Thondaa Video Song | TN 2026 | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka…

5 hours ago