BaakiyaLakshmi Serial Episode Update 03-09-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் எழிலுக்கு போன் போட்டு தாத்தா இறந்த விஷயத்தை சொல்லுகிறார். எழில் அதிர்ச்சியாகி போனை கீழே போட்டு விட அமிர்தா போனை எடுத்து என்ன ஆச்சு என்று கேட்க தாத்தா இறந்துட்டாருமா உடனே கிளம்பி வாங்க என்று தெரியும் போனை வைத்து விடுகிறார். பிறகு எழில் அழுது கொண்டே இருக்க அமிர்தா சமாதானம் செய்து வீட்டுக்கு வருகின்றனர்.
வீட்டில் உள்ள அனைவரும் எழில் பார்த்தவுடன் அழ செழியன் எழிலை வந்து கட்டிப்பிடித்து அழுகிறார். வந்து தாத்தாவை பாரு என்று ரூமுக்குள் கூட்டி போக எழில் தாத்தாவைப் பார்த்து கண்கலங்கி நிற்கிறார். உடனே பாக்யா அழ, எழில் கத்தி கதறி அழுகிறார். இனியாவை கோபி சமாதானம் செய்ய, குடும்பத்தினர் அனைவரும் அழுது கொண்டிருக்கின்றனர்.
ஈஸ்வரி ராமமூர்த்திக்கு பிறந்தநாளுக்கு சாக்லேட் கொடுத்தது, புடவையைப் பற்றி கேட்டது, மாலை மாற்றிக் கொண்டது சாப்பாடு ஊட்டி விட்டது என அனைத்தையும் நினைத்து கண்கலங்குகிறார்.
பழனிச்சாமி வீட்டுக்கு வர கோபிக்கு ஆறுதல் சொல்ல கோபி கண்கலங்கி உள்ளே போக சொல்லுகிறார். உள்ளே வந்தவுடன் செழியன் பழனிச்சாமியை கட்டிப்பிடித்து அழுகிறார். பழனிச்சாமி ஈஸ்வரியை பார்த்து பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதல் சொன்ன அவர் யாருக்கும் எந்த தீங்கும் செய்தது கிடையாது என்று சொல்லி அழுகிறார். எங்க எல்லாரையும் அனாதையா விட்டுட்டு போயிட்டாரு, அவருக்கு பதில் நான் போய் சேர்ந்திருக்கும் என்று அழுது கொண்டே மயங்கி விடுகிறார்.
செழியன் தண்ணி எடுத்துக் கொண்டு வந்து தெளித்து ஈஸ்வரியை எழுப்புகிறார். ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார் பழனிச்சாமி ராமமூர்த்தியை போய் பார்க்க செல்கிறார்.
எழில் என்ன சொல்லி அழுகிறார்?பாக்யா சொன்னது என்ன? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…