பாக்கியா எடுத்த முடிவு. கிண்டல் அடித்த இனியா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் செழியன் நான் ஏதாவது உதவி பண்ணட்டுமா என ஐஸ் வைக்க என்ன விஷயம்னு சொல்லு என்று கேட்கிறார். பிறகு சென்னைக்கு அழகாப்பன் நடத்தனுமே அவங்க அம்மா உன்கிட்ட பேசணும்னு சொன்னதா சொன்னா வளைகாப்பு முடிஞ்சு அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வாங்கலாமே அதனை எப்படியாவது வேண்டாம் என்று சொல்லிடு என்று இருக்கிறார்.

பாக்யா அவங்க பொண்ணு அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க நான் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்? சொல்ல முடியாதுல என்று கூற செழியனும் சொல்ல முடியாது தான் ஆனால் முயற்சி பண்ணுமா என்று சொல்ல சரி பார்க்கலாம் என்று சொல்ல செழியன் சந்தோஷப்படுகிறார்.

இந்த நேரத்தில் திடீரென ராமமூர்த்தி தூக்கத்தில் இருந்து எழுந்து ஈஸ்வரி என கத்த இருவரும் பதற்றத்துடன் ரூமுக்கு ஓடி வருகின்றனர். நான் உடனே ஈஸ்வரியை பார்க்கணும் என ராமமூர்த்தி அடம் பிடிக்க பாக்யா நீங்க போட்டிங்களா இல்லையா என கேட்டு மாத்திரை போட வைத்து சமாதானம் செய்கிறார்.

அடுத்ததாக கேண்டின்கு வரும் பாக்கியா செல்லியிடம் ராஜசேகர் சார் போன் பண்ணி இருந்தாரு இந்த மாதிரி பேங்க்ல பண்றவங்களுக்கு குறைந்த வட்டியில் லோன் கொடுக்கிறதா சொல்லி இருக்காரு நாம பேங்குக்கு போய் பாத்துட்டு வந்துடலாம் என்று சொல்லி கிளம்பி வருகின்றனர். பேங்க் ஆபிஸர் எல்லா டாகுமெண்டையும் வாங்கிப் பார்த்து எல்லாம் சரிதான் ஆனால் டிகிரி சர்டிபிகேட் இல்லை என்று சொல்ல பாக்யா நான் 12-ம் வகுப்பு வரை தான் படிச்சேன் என்று கூறுகிறார். மேனேஜர் இந்த லோன் டிகிரி முடிச்சு சீரியல் பண்றவங்களுக்கு தான், இதுக்கு நீங்க எலிஜிபில் கிடையாது என்று சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக வீட்டுக்கு வந்ததும் ஜெனி மற்றும் அமிர்தாவிடம் லோன் விஷயமாக பேசிக்கொண்டிருக்க அப்போது ராமமூர்த்தி அங்கு வருகிறார். பாக்கியா காலேஜ் படிக்காதனால எனக்கு லோன் கிடைக்காதுன்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல நம்ப எழில், அமிர்தா, ஜெனி டிகிரி தானே படிச்சிருக்காங்க, அவங்க பேர்ல வாங்கலாமே ஐடியா கொடுக்க இதுவும் நல்ல யோசனை தான் விசாரிச்சு பார்க்கிறேன் என சொல்கிறார்.

பிறகு இனியாவும் பாக்கியாவும் தூங்கிக் கொண்டிருக்கும் போது பாக்யா தூக்கம் வராமல் காலேஜ் செல்வது பற்றிய யோசித்துக் கொண்டிருக்க பிறகு இனியாவை எழுப்பி நானும் காலேஜ் போறேன் என சொல்ல அவர் லூசு மாதிரி பேசாத அம்மா, நீயும் நானும் ஒரே காலேஜ் போனா பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க? அதெல்லாம் அந்த வயசுல படிச்சு இருக்கணும் என சொல்லி படுத்து விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து வீட்டில் ராமமூர்த்தி சாப்பிடாமல் ஈஸ்வரியின் நினைப்பாகவே உட்கார்ந்து இருக்க செழியன் மற்றும் ஜெனி இருவரும் ஈஸ்வரிக்கு போன் போட்டு பேசி வீடியோ கால் வர சொல்லி ராமமூர்த்தி பேச வைக்க அவர் ஈஸ்வரியை பார்த்ததும் கண் கலங்குகிறார். இருவரும் பேசி முடித்து போனை வைத்ததும் இரண்டு பேரும் ஒரே லவ் பேர்ட்ஸா இருக்கீங்க என தாத்தாவை கலாய்க்கிறார்.

Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

கையில் வழங்கப்பட்ட சான்றிதழ்… நினைத்ததை செய்துமுடித்த பார்த்திபன்..!

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் திகழும் பார்த்திபன், தனது சிந்தனைகளாலும் செயல்களாலும் அடிக்கடி கவனம் ஈர்த்துவருபவர்.…

23 hours ago

‘என்னைக்கும் குறையாத மவுசு’ – 10 கோடி பார்வைகளை கடந்த ‘கூலி’ பவர்ஹவுஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில்…

23 hours ago

‘TN 2026’ – நாளை OTT-யில் வெளியீடு!

2026 தமிழ்நாடு தேர்தல் களத்தை பின்னணியாகக் கொண்டு உருவான நகைச்சுவை திரைப்படம் ‘டிஎன் 2026’. இந்த படம் கடந்த 14-ம்…

23 hours ago

‘மனிதன் தெய்வமாகலாம்’ – OTT வெளியீட்டு அப்டேட்!

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், நடிகர் செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. விஜயா சதீஷ்…

24 hours ago

மோகன்லாலின் ‘த்ரிஷ்யம்-3’ – இன்று மாலை வெளியாகிறது டீசர்!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. அதன் வெற்றியைத் தொடர்ந்து…

24 hours ago

Polladha Aasaigal Lyric Video

Polladha Aasaigal Lyric Video | 29 | Sean Roldan | Vidhu, Preethi Asrani | Rathna…

2 days ago