பாக்கியா கொடுத்த ஷாக். அவமானப்பட்ட கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவுக்கு அட்மிஷன் முடிந்து கோபி பாக்கியா மற்றும் இனியா மூவரும் வெளிய வர இனிய அம்மாவிடம் எப்படி நான் இப்படி எல்லாம் என்று கேட்க என்னை பத்தி என்ன நெனச்ச என பாக்யா பில்டப் கொடுக்கிறார்.

பிறகு கோபி சரி ஏதாவது சாப்பிடறியா? இங்கே கேன்டீன்ல சாப்பாடு நல்லா இருக்கும் என்று இனியாவை கூப்பிட இனியா வேண்டாம் பசிக்கல என சொல்கிறார். இதை அடுத்து கோபி திரும்பவும் விஸ்காம் படிப்புல பெரிய ஃபியூச்சர் இல்லை, குழந்தை ஆசைப்பட்டானு சொல்லி எல்லாரும் சேர்த்து விட்டுருங்க நாளைக்கு நான்தான் சொன்னேன்னா நீங்க எடுத்து சொல்லி இருக்கலாம் இல்ல என்று அவர் கேட்கும் போது என்ன பதில் சொல்லப் போறீங்க என கேள்வி கேட்க பாக்க நான் ஒன்னும் விசாரிக்காமல் சேர்த்து விடல விஸ்காம் படிப்பிலும் நிறைய வாய்ப்புகள் இருக்கு என அந்த படிப்பு பற்றி எடுத்து சொல்ல கோபி மிரண்டு நிற்கிறார்.

அடுத்ததாக கோபி இனியவை கேண்டின் அழைத்துச் செல்ல பாக்யா காலேஜ் சுற்றி பார்க்க போய் ஒரு கிளாஸ் ரூமில் உட்கார்ந்து போர்டில் தன்னுடைய பெயரை எழுதிப் பார்த்து ரசிக்கிறார். அடுத்ததாக இனியாவிடம் காலேஜ் வந்தது பற்றி சொல்லி சந்தோஷப்படுகிறார்.

அதைத் தொடர்ந்து ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு வரும் பாக்கியா காலேஜ் நடந்த விஷயங்கள் பற்றி சொல்லி எனக்கு காலேஜ் போய் படிக்கணும்னு ஆசை ஆனால் அப்பா இறந்து போயிடுமே அதை படிக்க முடியல என்று வருத்தப்பட பழனிச்சாமி இப்பயும் படிக்கலாமே என்று சொல்கிறார்.

இந்த வயசுல எப்படி சார் முடியும் என பாக்கியா கேள்வி கேட்க 108 வயதில் ஒரு பாட்டி படித்து முதல் மதிப்பெண் வாங்கி இருக்கும் விஷயத்தை சொல்கிறார். அது மட்டுமல்லாமல் ஈவினிங் காலேஜ் குறித்து சொல்ல நீங்க சொல்றதும் யோசிக்கிற மாதிரி தான் இருக்கு நான் யோசிக்கிறேன் என பாக்கியா கூறுகிறார்.

அதற்கு அடுத்ததாக கேண்டீன் வந்த பாக்கியா செல்வியிடம் இனியாவை காலேஜ் சேர்த்தது பழனிச்சாமி சொன்ன ஐடியா இது எல்லாம் சொல்லி நானும் காலேஜ் போகட்டுமா நீ என்ன சொல்ற என கேட்க சும்மா காமெடி பண்ணிட்டு இருக்காத அக்கா என செல்வி பதில் கொடுக்கிறார். அன்னைக்கு ஏதோ சும்மா சொன்னேன் இருக்கிற வேலையில இதெல்லாம் உன்னால எங்க பண்ண முடியும் என கூறுகிறார்.

மறுபக்கம் வீட்டுக்கு சீக்கிரம் வரும் செழியன் ஜெனியின் பக்கத்தில் உட்கார்ந்து பேச அப்போது ஜெனி செழியனின் மாற்றம் சந்தோஷத்தை கொடுப்பதாக கூறுகிறார். மேலும் வளைகாப்பு பற்றி பேசும் போது வளைகாப்பு முடிந்ததும் அம்மா வீட்டுக்கு போயிடுவேன் என்று சொல்ல செழியன் அதெல்லாம் போகக்கூடாது நீங்கதான் இருக்கணும் என்று கோபித்துக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

15 hours ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

24 hours ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

1 day ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

1 day ago

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

2 days ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

2 days ago