ராமமூர்த்தியை நினைத்து சோகத்தில் குடும்பத்தினர், ஜெனி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

குடும்பத்தினர் அனைவரும் வருத்தத்தில் இருக்க ஜெனி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் அழுது கொண்டே இருக்க ஜெனி இனியாவை தூங்க சொல்கிறார். செழியன் மற்றும் எழில் அழுது கொண்டே இருக்க எழில் அமிர்தாவை தூங்க சொல்கிறார். தாத்தா சேரில் உட்கார்ந்து கொண்டு என்ன பேராண்டி தூங்கலையா என்று கேட்பது போல் அவருக்கு தோன்றுகிறது. உடனே மறைந்து விட கண் கலங்கி அழுகிறார் எழில். பிறகு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க காலையில் பாக்யா எழுந்து வர அவர் அந்த சாரில் பாக்யா இங்க வாமா என்று கூப்பிடுவது போல் தோன்றுகிறது ஆனால் அவர் அங்கே போய் பார்த்தால் அவர் மறைந்து விடுகிறார் பாக்யா சேர் பக்கத்தில் உட்கார்ந்து ராமமூர்த்தியை நினைத்து அழுகிறார்.

ஜெனியின் அப்பா செழியன் மற்றும் எழிலுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பாக்யாவிடம் வந்து நாங்க ஜெனிய கொஞ்ச நாள் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் என்று சொல்லுகிறார் முதலில் சம்மதிக்க மறுத்த செழியன் பிறகு பாக்யா சொன்னவுடன் போயிட்டு வா என்று சொல்லுகிறார். ஜெனியும் சரி என்று தலையாட்ட பாட்டியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போ என்று அனுப்பி வைக்கிறார்.

ஈஸ்வரி இடம் ஜெனி அம்மா அவர் உங்க கூட தான் இருப்பாரு நாங்க எல்லாம் உங்களுக்காக இருக்கோம் என்று ஆறுதல் சொல்கிறார். பிறகு ஈஸ்வரியிடம் நாங்க ஜெனிய கொஞ்ச நாள் வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் என்று சொல்ல உடனே ஜெனி அப்படியெல்லாம் இல்லை நான் எங்கேயோ வரல என்று சொல்லி விடுகிறார். ரூமை விட்டு வெளியே வந்த ஜெனி பாக்யா,ஜோசப் என யார் சொல்லியும் என்ன போர்ஸ் பண்ணாதீங்க நான் எங்க இருந்தாலும் இங்கே என்ன நடக்குதுன்னு தான் யோசிச்சுகிட்டு இருப்பேன் என்னால அப்படி இருக்க முடியாது என்று சொல்ல ஜெனியின் அம்மா விட்ருங்க அவ எங்க விருப்பமா இருக்காலோ இருக்கட்டும் என்று சொல்லி விடுகிறார்.

மறுபக்கம் கோபி ரொம்ப நேரம் ஆகியும் தூங்கிக் கொண்டிருக்கிறார்.மயூ அப்பாவுக்கு என்ன ஆச்சுமா என்று கேட்க, இறந்தது அவரோட அப்பா மையூ கொஞ்ச நாளைக்கு கஷ்டமா தான் இருக்கும் அப்புறம் சரியாயிடுவாரு நீ அத பத்தி கவலைப்படாத போ என ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறார்.

கோபி எழுந்து வர அவருக்கு காபி போட்டு கொடுத்துவிட்டு இன்னைக்கு கிச்சனுக்கு போக வேண்டாம் என சொல்லி நான் போய் டிபன் செய்வேன் என்று கிளம்பி செல்கிறார். செழியன், எழில் என அனைவரும் தாத்தாவை எரித்த இடத்திற்கு சடங்குகளை செய்ய தொடங்க எழில் தொடர்ந்த அழுது கொண்டே இருக்கிறார். அங்கே கோபி மற்றும் ராதிகா வந்து நிற்கின்றனர்.

கோபி வந்ததற்கு காரணம் என்ன? என்ன செய்யப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Baakiyalakshimi serial today episode
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

5 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

5 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

5 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

5 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

5 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

5 days ago