baakiyalakshimi serial today episode update 09-07-25
நித்திஷை எழில் அடிக்க, பாக்யாவிடம் சுதாகர் வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா டைனிங் டேபிளில் குடும்பத்தாருடன் உட்கார்ந்து கொண்டிருக்க உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் இனியா நேத்து என்கிட்ட ஒன்னு சொன்னா நித்தீஷ் ரிலீஸ் ஆயிட்டானா என்று சொல்ல விடுதலை பண்ணிட்டாங்களா என்று கேட்க இல்லை ஜாமின்ல வெளியே வந்திருக்கிறதா சொல்றாங்க என்று சொல்லுகிறார். உடனே இனியாவும் வந்துவிட இனியாவிடம் என்ன விஷயம் நடந்தது என்பதை கேட்க நிதிஷ் வந்து கலாட்டா செய்த விஷயத்தை சொல்லுகிறார். எனக்கு வேலை செய்ற இடத்துல இது மாதிரி பண்றது சங்கடமா இருக்கு என்று சொல்ல பாக்கியா இனிமேல் ஆபீஸ்ல இல்ல எங்கேயுமே வெளியே பார்த்து பேசக்கூட முடியாது அதுக்கு நாங்க பொறுப்பு என்று சொல்ல கோபியும் அதையே சொல்லுகிறார்.
இதெல்லாம் இப்படி பேசினா சும்மா இருக்க மாட்டான் நானும் செழியனும் அங்க போய் அவனை அடிக்கப் போறோம் என்று சொல்ல பாக்யா இருவரும் இப்போதைக்கு அது மாதிரி எதுவும் பண்ணக்கூடாது பிரச்சனை பெருசா ஆய்டும் என்று சொல்ல கோபி நான் போய் சுதாகர பார்த்து பேசுறேன் என சொல்லுகிறார். பாக்கியா வருவதாக சொல்ல நீ வேண்டாம்.நான் மட்டும் போறேன் என சொல்லுகிறார் ஆனால் செழியன் மற்றும் எழில் இருவரும் நாங்களும் வருவோம் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர். எழில் போனில் அமிர்தாவிடம் இனியா பிரச்சினைகளை பற்றி பேசிக்கொண்டிருக்க இனிய வருகிறார்.
நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன் என்று சொல்ல நான் வேணா ட்ராப் பண்ணவா இனியா என்று கேட்கிறார் வேணா நான் ஆட்டோல போகிறேன் என்று சொல்ல சரி உனக்கு டைம் இருக்கானா கொஞ்ச நேரம் பேசலாம் என்று சோபாவில் உட்கார்ந்து பேசுகின்றனர் எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லுவ ஆனா இந்த விஷயத்தை ஏன் சொல்லவில்லை ஐயா நிதிஷ் இந்த விஷயத்துல அரஸ்ட் ஆகாம இருந்திருந்தால் நீ அவனை சகிச்சுட்டு வாழ்ந்துட்டு இருப்பியா என்று கேட்க தெரியவில்லை என்று சொல்லுகிறார். அவங்க அம்மா அப்பா இத பத்தி எதுவுமே பேசலையா என்று கேட்க அவங்க என் மேல பழியை போடுறதிலேயே முதல்ல இருந்தாங்க ஆகாஷ் விஷயம் தெரிஞ்சதுனால அதனாலதான் நித்திஷ் இப்படி ஆயிட்டான்னு என்ன பிளேம் பண்ணிக்கிட்டே இருந்தாங்க என்று சொல்லி கண்கலங்க எழில் ஆறுதல் சொல்லுகிறார்.எனக்கு இந்த கல்யாண வாழ்க்கையை மறந்துடனும் நான் பழைய மாதிரி வேலைக்கு போயிட்டு இருந்துக்கிறேன் என சொல்ல, எழிலும் கண்டிப்பாக நீங்க சந்தோஷமா இருப்ப இல்லையா என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சந்திரிகா சுதாகர் நிதிஷை சாப்பிட கூப்பிட எனக்கு வேணாம் இவனுக்கே கூட்டிட்டு போய் போட முடிஞ்சா இடுப்புல தூக்கி வச்சு ஊட்டி விடு என்று கோபப்பட எதுக்கு இப்போ சும்மா அவனை திட்டுறீங்க என்று சொல்லுகிறார் அதுதான் நான் இனியாவை கூட்டிட்டு வரல அதுக்காக தான் என்று சொல்ல அவன் தான் செக்யூரிட்டியை வைத்து துரத்தி விட்டிருக்கா இல்ல அப்புறம் என்ன என்று கேட்கிறார். துரத்திவிட்டது என்று பேசிக் கொண்டிருக்க கோபிசெழியன் எழில் வருகின்றனர் சுதாகர் அவரை வரவேற்ற உட்காருங்கள் என்று சொல்ல நாங்கள் உக்காரவர்ல பேச வந்திருக்கோம் என்று சொல்லுகிறார் .
இனிய ஆஃபீஸ்க்கு நித்திஷ் எதுக்கு போன என்று கேட்க அவன் வைஃபை பார்ப்பதற்கு அவன் போனா என்று சந்திரிகா சொல்லுகிறார் என் தங்கச்சிக்கு என் புருஷனா இந்த கிரிமினல் என் தங்கச்சியோட புருஷனா என்று எழில் கோபப்பட்டு பேச கோபி அமைதியாக இருக்க சொல்லுகிறார் உடனே நித்திஷ் அப்படித்தான் போவேன் என சொல்ல எழில் கோபப்பட்டு நித்திஷ்ஷை அடிக்க உடனே அடிதடி ஏற்படுகிறது. பிறகு கோபி வார்னிங் கொடுத்துவிட்டு கிளம்ப சுதாகர் பாக்யாவை ஹோட்டலில் வந்து சந்திக்கிறார். சுதாகர் என்ன சொல்லுகிறார்?அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
I,Nobody Release Teaser Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer|Jakes Bejoy
Arulvaan Official Trailer | Arulnidhi, Aarav, Ramya Pandian | G.V. Prakash Kumar | Tamil Trailer
Malligai Mottu Promo Song | Mr.Bhaarath | Niranjan | Pranav Muniraj | Samyuktha | Lokesh…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…
நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…