ஈஸ்வரி கேட்ட கேள்வி,பதிலடி கொடுத்த பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியின் கேள்விக்கு பாக்யா பதில் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வியுடன் சேர்ந்து ஓனருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வாடகை பணத்தையும் கொடுக்கின்றனர். பிறகு அக்ரிமெண்ட் போட்டு கையெழுத்து வாங்கிக் கொண்டு ஓனர் சென்றுவிட பாக்யா என்னென்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து பேசிக் கொண்டிருக்கிறார் அப்போ ஒரு வழி பாத்துரலாம்னு இருக்கியா அக்கா என்று சொல்ல கடைசியா ஒருவாட்டி முயற்சி பண்ணி பார்க்கலாம் என்று சொல்லுகிறார். ஏற்கனவே டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து இருக்கேன் உன் மாமியார் அந்த பேச்சு பேசுனாங்கன்னு சொன்ன இப்ப எப்படி சமாளிக்க போற என்று கேட்க பாத்துக்கலாம் செல்வி என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் வீட்டில் ஈஸ்வரியும் கோபியும் உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி பாக்யா கடை திறக்கப் போகும் விஷயம் குறித்து சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து பாக்கிய வர ஈஸ்வரி என்ன டோக்கன் அட்வான்ஸ் வாங்கிட்டியா என்று கேட்க இல்லை என்று சொல்லுகிறார் ஏன் ஏமாத்திட்டாங்களா என்று கேட்க நான் கேட்கவே இல்லையே என்று சொல்லுகிறார் அப்ப நீயே கூப்பிட்டு வந்துட்டியா என்று சொல்ல நான் தான் ரெஸ்டாரன்ட் திறக்கும்போது நான் எதுக்கு அட்வான்ஸ் திருப்பி வாங்கணும் என்று கேட்க ஈஸ்வரி கோபப்பட்டு எழில் மற்றும் செழியனை கூப்பிடுகிறார். அவ்வளவு சொல்லியும் உங்க அம்மா அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்து இருக்கா என்று சொல்ல செழியன் எதுக்குமா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்டேன் எழில் நான் கொஞ்ச நாள் அமைதியா இரும்மா ஏதாவது இதைவிட நல்ல ரெஸ்டாரன்ட் வந்தா பண்ணலாம்னு தானே சொன்னேன் என்று சொல்லுகிறார்.

கோபியும் எழில் சொல்றது சரிதானே என்று சொல்ல என் விஷயத்துல இது சரியா இருக்கணும் நான் தான் முடிவு பண்ணனும் என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி உன் தலையில நீயே மண்ணள்ளி போட்டுப்பியா அது கூட யாரும் சொல்ல கூடாதா யார் பேச்சும் கேக்க கூடாது என்ற முடிவுல நீ இருக்கியா என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இனியாவோட மாமனார் நீ இட்லி கடை நடத்துனா எப்படி நினைப்பாரு அது இனியாவுக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் என்று கேட்கிறார். மறுபக்கம் செழியன் ஜெனி வீட்ல என்னம்மா நினைப்பாங்க என்று கேட்கிறார். அந்த இட்லி கடை நடத்துனா உனக்கு என்ன ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா வருமானம் வருமா அதை விட அதிகமா நான் கொடுக்கிறேன் என்று சொன்ன வேண்டாமா கொஞ்ச நாள் பொறுமையா இருங்க சின்ன பிசினஸ் தொடங்குவதில்லை உங்க கூட என்னால நிக்க முடியாது கொஞ்சம் பெருசா பண்ணலாம் என்று சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி எழிலும் சொல்லிட்டேன் அப்புறம் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்க எனக்கு இனியா மாமனார் என்ன சொல்லுவாரு ஜெனி அம்மா வீட்டுல என்ன நினைப்பாங்கஎன்று யோசித்தால் என் மனசுல இருக்கிறது என்னால் செய்ய முடியாமல் போய்விடும் என்று சொல்லுகிறார்.

என்னால வேலை செய்யாம காலம் பூரா இருக்க முடியாது நீங்க என் மேல காற்ற அக்கறை எனக்கு புரியுது ஆனா இந்த விஷயத்துல என்ன கட்டாயப்படுத்தாதீங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட ஈஸ்வரி இவைப்போ நடுத்தெருவுல நிற்கிற அதே மாதிரி குடும்பத்தை நிக்க வைக்காமல் விடமாட்டா என்று கோபமாக சென்று விடுகிறார்.

மறுபக்கம் பாக்யா ரெஸ்டாரன்ட்டில் பெயிண்ட் அடிக்கும் நபர் வர அவர் 30 ஆயிரம் ஆகும் கடைசியாக இருபதாயிரம் பேசி முடித்துவிட்டு பாக்கியாவும் செல்வியும் ரெஸ்டாரன்டை கிளீன் பண்ணி பெயிண்ட் அடிக்கின்றனர் கோபி பார்த்துவிட்டு சென்று விடுகிறார். பாக்கியா சாப்பிட்டு கொண்டு இருக்க கோபி வந்து நிற்கிறார் அத்தை தூங்கிட்டாங்க என்று சொல்ல நான் உங்கள பாக்க வரல உன் கிட்ட தான் பேசணும் என்று சொல்லுகிறார்.

என்ன விஷயம் என்று கேட்க நீ ரெஸ்டாரன்ட் தொடங்கும் பொழுது அதுவும் இல்லாம மெயின் ஏரியாவுல இல்ல என்று சொல்ல, ஏற்கனவே அங்க மெஸ் நடத்துன இடம்தான் என்று ஒனர் சொன்னதாக சொல்ல அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க என்று சொல்லுகிறார் நான் அக்கம் பக்கத்திலும் விசாரிச்சேன் என்ற பாக்யா சொல்லுகிறார். பிறகு பாக்கியாவிடம் கோபி என்ன சொல்லுகிறார்? அதற்கு பாக்கியா பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


baakiyalakshimi serial today episode update 07-05-25
jothika lakshu

Recent Posts

Lenin Pandiyan Official Trailer

Lenin Pandiyan Official Trailer | Isaignani Ilaiyaraaja | Gangai Amaran | Roja | Dhaarshan Ganesan

20 hours ago

வெயிலில் தாகம் தீர்க்கும் சேவை – சேரன், அதுல்யா ரவி முன்னிலையில் நீர் மோர் பந்தல் தொடக்கம்

கோடை வெப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளின் தாகத்தை தணிக்க, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சிறப்பான…

20 hours ago

கிரிக்கெட் வீரராக ஜி.வி. பிரகாஷ்!

நடிகரும் இசையமைப்பாளருமான G. V. Prakash Kumar, புதிய திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக மாறவுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக…

20 hours ago

‘கருப்பு’ படத்தின் ‘ராத்து ராசன்’ பாடல் வெளியீடு

இயக்குநர் R. J. Balaji இயக்கத்தில் Suriya நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் தொடர்ந்து அப்டேட்களால் கவனம் ஈர்த்து…

20 hours ago

மகளுக்குப் பெயர் சூட்டிய ஹரிஷ் கல்யாண்!

தமிழ் திரையுலகில் முன்னேறி வரும் நடிகர்களில் ஒருவரான Harish Kalyan, தனது குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.…

20 hours ago

‘ஹாய்’ படத்தின் முதல் பாடல் அப்டேட்

தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவரான Kavin, தனது புதிய படம் ‘ஹாய்’ மூலம் மீண்டும்…

20 hours ago