கோபியை நினைத்து அழும் பாக்கியா.. செழியன் சொன்ன வார்த்தை.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் மண்டபத்தை விட்டு கிளம்பும்போது ராதிகா பாக்கியாவை பார்த்ததும் கோபியின் கையை இறுக்கமாக பிடிக்க பாக்யா கண்டும் காணாமல் திரும்பிக் கொள்கிறார்.

இதையடுத்து ஈஸ்வரி மற்றும் இனியா என எல்லோரும் வீட்டுக்கு வந்ததும் இனியா செழியனை கட்டிப்பிடித்து அப்பா அந்த ராதிகா ஆன்ட்டியை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு என சொல்ல அவன் அதிர்ச்சி அடைகிறான். பிறகு ஜெனி இதெல்லாம் ஆன்ட்டிக்கு தெரியுமா என சொல்ல அம்மா அங்க தான் சமைச்சிட்டு இருக்காங்க என்ன சொன்னதும் செழியன் இன்னும் அதிகம் கதறி அழுகிறான். அம்மா எப்படி இதெல்லாம் தாங்கிக்கிட்டாங்க, அப்பா இப்படி பண்ணுவார் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கல என சொல்லி அழுகிறான்.

இந்த பக்கம் ராதிகா மற்றும் கோபி வீட்டுக்கு வந்ததும் வெளியில் நிற்க வைத்து எடுக்க அக்கம்பக்கத்தினர் எல்லோரும் இவர்தான் அடிக்கடி இங்கு வந்துட்டு போனாரு என பேசுகின்றனர். பிறகு உள்ளே அழைத்துச் சென்று பாலும் பழமும் கொடுத்த பிறகு செல்பி எடுத்த பிறகு முடிஞ்சிடுச்சா உள்ள போறேன் என ராதிகா எழுந்து கிளம்பி விட ஒவ்வொருத்தராக கோபியை கண்டு கொள்ளாமல் எடுத்துச் சென்று விடுகின்றனர். வீட்டில் தனியாக கோபி அமர்ந்து கொண்டிருக்க அவர் அதிர்ச்சி அடைகிறார்.

இந்த பக்கம் பாக்கியா வீட்டுக்கு வர செழியன் பாக்கியாவை பார்த்ததும் அம்மா நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு அப்பாவுக்கு கண்மூடித்தனமா சப்போர்ட் பண்ணு ஆனா நீ பண்ணுவது தான் சரி இனிமே இந்த குடும்பத்தை நான் பார்த்துப்பேன் நீ எதுக்காகவும் கவலைப்படாத என கட்டிப்பிடித்து கதற இனியா நானும் தப்பு பண்ணிட்டேன் என அழுகிறார்.

பிறகு பாக்கியா கிச்சனில் அமர்ந்து அழுது கொண்டிருக்க அப்போது வந்த ஈஸ்வரி பாக்யாவுக்கு ஆறுதல் கூறுகிறார். உனக்காக நாங்க இருக்கும் எதுக்காகவும் கவலைப்படாத என சொல்கிறார். அதன் பிறகு எழில் வீட்டுக்கு வர பாக்கியா எதுவும் சொல்லாமல் போய் கை கால் கழுவிட்டு வா சாப்பிடலாம் என சொல்ல அவன் மேலே செல்ல இனியா மற்றும் செழியன் கண்ணீருடன் நடந்த விஷயங்களை சொல்ல எழில் கீழே இறங்கி வந்து அம்மாவை கட்டி பிடித்து அழுகிறான். போட்டோவில் கோபியின் முகத்தை கையால் அடித்து உதைத்து சிதைக்கிறார்.

பிறகு இனிமே சந்தோஷமா இரு அந்த ஆள் போகட்டும் அவர் நமக்கு வேண்டாம் என சொல்லி இனியாவிடம் நீ எதுக்கும் கவலைப்படாத உனக்கு ரெண்டு அண்ணனுங்க இருக்கும் நாங்க பார்த்துக்கிறோம் என சொல்லிவிட்டு ஈஸ்வரிடம் உங்களுக்கு நாங்க இருக்கும் பாட்டி என அழ ஈஸ்வரியும் கண் கலங்கி அழுகிறார்.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

அர்ஜூனின் ப்ளாஸ்ட் திரைவிமர்சனம்

கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…

10 hours ago

நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது தனுஷின் “கர”!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…

10 hours ago

கருப்பு படம் பார்த்த ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…

10 hours ago

‘ப்ளாஸ்ட்’ முதல் நாள் வசூல் இவ்வளவா?

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…

10 hours ago

ஆகஸ்ட் 14ல் வெளியாகும் “விஸ்வநாத் & சன்ஸ்”!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…

10 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கிய “சிக்மா” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…

10 hours ago