பாக்கியா போன் போட்ட கோபி..ராதிகாவின் குடும்பத்தினர் செய்த செயல்..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி பாக்யாவுக்கு போன் பண்ணி கண்ட மணிக்கு பேசிய நிலையில் கடுப்பாகி போனை கட் செய்து விடுகிறார். செல்வி மற்றும் ஜெனி யார் என கேட்க தேவையில்லாத போன் கால் ஆனா இந்த மாதிரியான போன் கால் தான் நம்புவதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என சொல்கிறார். மேலும் குடும்பத்த சமாளிக்க இப்போ பண்ணிட்டு இருக்க இந்த மசாலா பிசினஸ் கேட்டரிங் ஆர்டர் பத்தாது இன்னும் பெருசா ஏதாவது செய்ய வேண்டும் யோசிக்க வேண்டும் என பாக்யா கூறுகிறார்.

இன்னும் பெருசா என்ன பண்ண முடியும் நம்மளால சமாளிக்க முடியுமா என சொல்ல பாக்கியா முடியும் என்று நினைத்தால் முடியும் என்று உறுதியாக சொல்ல ஜெனி அவரை பாராட்டுகிறார். அடுத்ததாக வீட்டில் உள்ளவர்கள் வந்து இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்டிட்டியா என கேட்க பாக்யா அமைதியாக இருக்க அப்போது வந்த இனியா அப்பா ஸ்கூல் பீஸ் கட்டின விஷயத்தை சொல்ல ஈஸ்வரி கோபி பெருமையாக பேசுகிறார்.

இந்த பக்கம் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்து ராதிகா கோபியை சந்தித்த விஷயத்தை சொல்ல அவருடைய பரிதாபமான நிலையை பற்றி சொல்ல அவரது குடும்பத்தார் உடனே கோபியை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவருக்கு ஆதரவாக இரு என சொல்கின்றனர். ஆனால் ராதிகா எனக்கு இப்ப கோபி மேல இருக்கறது வெறும் பரிதாபம் தான் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

The Paradise Tamil Teaser

The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander

50 minutes ago

ஜி.டி.என் திரை விமர்சனம்

‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…

1 hour ago

‘நடிகர் சங்க கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்’ – விஷால் அறிவிப்பு

சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…

2 hours ago

‘அதிகார ஆசை இல்லை… அரசியலுக்கு வர விருப்பமில்லை!’ – விஜய் குறித்து மனம் திறந்த மாதவன்

தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…

2 hours ago

தமிழ் தெரியாதது பெருமை இல்லை… அது அவமானம்! – பள்ளி விழாவில் மாணவர்களுக்கு தனுஷ் உருக்கமான அறிவுரை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…

2 hours ago

செவிலியர்களின் தியாக வாழ்க்கையை பேசும் ‘செய்! செய்யாதே!’ – ஹெச். ராஜா நெகிழ்ச்சி பேச்சு

சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள்,…

2 hours ago