baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் ராதிகா வீட்டுக்குச் சென்ற கோபி எனக்குப் ஆகியவை கல்யாணம் பண்ணதுல இருந்து பிடிக்காது, நான் அந்த வீட்டில் சந்தோஷம் இல்லை. எனக்கு நீங்க ரெண்டு பேர்தான் உயிர் நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது என கதை கதையாக கூறுகிறார். ஆனால் இது அனைத்தையும் கேட்ட ராதிகா நீங்க எந்த கதையையும் சொல்ல வேண்டாம் நான் எதையும் நம்புவதாக இல்லை வெளிய போங்க என கூறுகிறார். நான் எதுக்கு வெளிய போகணும் உங்க ரெண்டு பேரும் விட்டு என்னால போக முடியாது என கோபி ஒரு பக்கம் சத்தம் போட மயூரா வெளியே எழுந்து வந்து விடுகிறார்.
வீட்டில் நீங்களும் எங்க அப்பாவ மாதிரி சண்டை போடாதீங்க தயவுசெய்து சண்டை போடாதீர்கள் என கெஞ்சி கேட்கிறார். பிறகு கோபி சாரிடா செல்லம் என மயூராவிடம் செல்ல அவரை தடுத்து நிறுத்தி வெளிய போங்க என கூறுகிறார் ராதிகா. அதன்பிறகு கோபி அமைதியாக வீட்டுக்கு கிளம்பி சென்று விடுகிறார்.
வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அனைவரும் எழில் படம் ரிலீசாவது குறித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கோபி ராதிகா வீட்டை விட்டு வெளியே அனுப்பிய சோகத்தில் அமைதியாக இருக்கிறார். பிறகு ஈஸ்வரி எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிறார் என கேட்க ஒன்னும் இல்லம்மா நீங்க பேசினது எல்லாத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன் என சொல்லிவிட்டு எழிலுக்கு வாழ்த்துக் கூறுகிறார். பிறகு சாப்பிடாமல் அப்படியே எழுந்து செல்ல சாப்பிட்டு போ என்று சொல்ல போதும் எனக் கூறி விடுகிறார்.
அதன்பிறகு எழில் பாக்கியா டல்லாக இருப்பதை பார்த்து என்ன ஏது என கேட்க ஒன்றுமில்லை என கூறுகிறார். பின்னர்ப் ஆகியவை வெளியே அழைத்துச் சென்று தன்னுடைய பட பேனர்களை காட்டுகிறார். ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு கூட்டி வருகிறார். ரூமுக்குள் கோபி ராதிகாவுக்கு போன் செய்து பார்க்கிறார் போனை எடுக்காததால் வாய்ஸ் மெசேஜ் செய்யும் போது பாக்கியா வந்துவிடுகிறார்.
பிறகு கோபி ராதிகாவிடம் இருந்து எந்த ரிப்ளையும் வராத காரணத்தினால் கடுப்பாக இருக்கிறார். பிறகு கோபி தூங்கியதும் அவருக்கு தெரியாமல் அவருடைய போனை எடுத்து யாருக்கு போன் செய்கிறார் என பாக்கியா நோட்டம் விடுகிறார். அதற்குள் தூக்கத்திலிருந்து எழுந்து கோபி என் போனை எடுத்து நீ என்ன பண்ற வேவு பார்க்கறியா என சத்தம் போடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…