baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் ராதிகா வீட்டுக்குச் சென்ற கோபி எனக்குப் ஆகியவை கல்யாணம் பண்ணதுல இருந்து பிடிக்காது, நான் அந்த வீட்டில் சந்தோஷம் இல்லை. எனக்கு நீங்க ரெண்டு பேர்தான் உயிர் நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது என கதை கதையாக கூறுகிறார். ஆனால் இது அனைத்தையும் கேட்ட ராதிகா நீங்க எந்த கதையையும் சொல்ல வேண்டாம் நான் எதையும் நம்புவதாக இல்லை வெளிய போங்க என கூறுகிறார். நான் எதுக்கு வெளிய போகணும் உங்க ரெண்டு பேரும் விட்டு என்னால போக முடியாது என கோபி ஒரு பக்கம் சத்தம் போட மயூரா வெளியே எழுந்து வந்து விடுகிறார்.
வீட்டில் நீங்களும் எங்க அப்பாவ மாதிரி சண்டை போடாதீங்க தயவுசெய்து சண்டை போடாதீர்கள் என கெஞ்சி கேட்கிறார். பிறகு கோபி சாரிடா செல்லம் என மயூராவிடம் செல்ல அவரை தடுத்து நிறுத்தி வெளிய போங்க என கூறுகிறார் ராதிகா. அதன்பிறகு கோபி அமைதியாக வீட்டுக்கு கிளம்பி சென்று விடுகிறார்.
வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அனைவரும் எழில் படம் ரிலீசாவது குறித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கோபி ராதிகா வீட்டை விட்டு வெளியே அனுப்பிய சோகத்தில் அமைதியாக இருக்கிறார். பிறகு ஈஸ்வரி எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிறார் என கேட்க ஒன்னும் இல்லம்மா நீங்க பேசினது எல்லாத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன் என சொல்லிவிட்டு எழிலுக்கு வாழ்த்துக் கூறுகிறார். பிறகு சாப்பிடாமல் அப்படியே எழுந்து செல்ல சாப்பிட்டு போ என்று சொல்ல போதும் எனக் கூறி விடுகிறார்.
அதன்பிறகு எழில் பாக்கியா டல்லாக இருப்பதை பார்த்து என்ன ஏது என கேட்க ஒன்றுமில்லை என கூறுகிறார். பின்னர்ப் ஆகியவை வெளியே அழைத்துச் சென்று தன்னுடைய பட பேனர்களை காட்டுகிறார். ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு கூட்டி வருகிறார். ரூமுக்குள் கோபி ராதிகாவுக்கு போன் செய்து பார்க்கிறார் போனை எடுக்காததால் வாய்ஸ் மெசேஜ் செய்யும் போது பாக்கியா வந்துவிடுகிறார்.
பிறகு கோபி ராதிகாவிடம் இருந்து எந்த ரிப்ளையும் வராத காரணத்தினால் கடுப்பாக இருக்கிறார். பிறகு கோபி தூங்கியதும் அவருக்கு தெரியாமல் அவருடைய போனை எடுத்து யாருக்கு போன் செய்கிறார் என பாக்கியா நோட்டம் விடுகிறார். அதற்குள் தூக்கத்திலிருந்து எழுந்து கோபி என் போனை எடுத்து நீ என்ன பண்ற வேவு பார்க்கறியா என சத்தம் போடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…