கோபியின் நாடகங்களை உடைத்த பாக்யா.. கோபிக்கு காத்திருக்கும் ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபியை நிற்க வைத்து பாக்கியா இதுவரை அவர் என்னவெல்லாம் நாடகம் போட்டு இருக்கார் எப்படி எல்லாம் இந்த குடும்பத்தை ஏமாற்றி இருக்கிறார் என ஒவ்வொரு விஷயமாக கூறுகிறார்.

முதலில் அந்த அவங்க வேற யாரும் இல்ல ராதிகா தான் என சொல்ல குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ராதிகாவை யாருமே தெரியாதுன்னு இவர் போட்ட நாடகத்தையும் நாம நம்மி கிட்டு தான் இருந்தோம். அவங்க வரும்போது எல்லாம் எதையாவது காரணத்தை சொல்லி எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்வது, நாம எல்லோரும் குன்னக்குடி போயிருக்கும் போது வேலை விஷயமா வெளியே போகிறதா சொல்லிட்டு ராதிகா கூடத்தான் ஹோட்டல்ல இருந்திருக்காரு. ஒரே ஹோட்டலில் இருப்பதால் ராதிகாவை பார்க்கலாம் என்று சொன்னபோது இவர் முகத்தில் வந்த பதற்றத்திற்கு அப்போ காரணம் தெரியல இப்போது தான் புரியுது என கூறுகிறார்.

ராதிகா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னபோது நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டேன் உங்களுக்கு புடிச்ச வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். கடவுள் கூட என்னை பார்த்து சிரிச்சிருப்பாரு. அவங்க கல்யாணம் பண்ணிட்டு இருந்தது இவரைத்தான் என எனக்கு தெரியாம போச்சு.

கோர்ட்டுக்கு கூட்டிட்டு போயி கேட்கிற கேள்விக்கு சரியென மட்டும் பதில் சொல்லுன்னு சொன்னாரு, கோர்ட்ல எல்லாரும் விவாகரத்து கேட்டு வந்திருந்தாங்க ஆனா அப்ப கூட இவர் மேல சந்தேகம் படாமல் ஜட்ஜ் அம்மா முன்னாடி நின்னு சரி என்று சொல்லிட்டு வந்தேன். ஆனா 25 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க விவாகரத்து வாங்கத்தான் அங்க போயிருக்கோம் என்று எனக்கு இப்பதான் புரியுது. அந்த ராதிகா தான் எல்லாத்துக்கும் காரணம் கோபியோட மனசையும் மாற்றி இருப்பார் என ஈஸ்வரி சொல்ல எனக்கு ராதிகா சொன்னது நல்லா ஞாபகம் இருக்கு இவர் குடும்பத்தை பத்தி அங்க தப்பு தப்பா சொல்லி இருக்காரு. அவர் நிறைய பொய் சொல்லிட்டார்னு சொன்னாங்க. அதுவும் இல்லாம அவங்களை நிக்க வச்சு நான் எப்படி கேள்வி கேட்க முடியும் எனக்கென்ன உரிமை இருக்கு. இவரை தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இவரைத்தான் கேள்வி கேட்க முடியும் என கூறி கேள்வி கேட்கிறார்.

ஈஸ்வரி கோபியை பிடித்து அப்படிலாம் இல்லன்னு சொல்லுடா என சொல்ல அந்த நேரத்தில் போஸ்ட் மேன் கோபிநாத் பெயருக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருப்பதாக கூறுகிறார். செழியன் வாங்க போக கோபிநாத் தான் கொடுப்பேன் என போஸ்ட்மேன் கூட பிறகு கோபி சென்று கையெழுத்து போட்டு அதை வாங்கி பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

13 minutes ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

30 minutes ago

Second Case of Seetharam Trailer [Tamil]

https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH

37 minutes ago

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…

2 hours ago

கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!

கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…

2 hours ago

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…

2 hours ago