baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா அப்படின்னு மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்க ஜெனி மற்றும் செல்வி என இருவரும் அவரை உள்ளே அழைக்க நீங்க என்ன தனியா விட்டு போங்க என பாக்கியா சொல்ல ஜெனி கீழே சென்று விடுகிறார். செல்வி அங்கேயே நிற்க பாக்கியா அவரை திட்டி அனுப்புகிறார்.
இந்தப் பக்கம் கோபி மருத்துவமனையில் இருக்க எழில் அவரையே பார்த்துக் கொண்டிருக்க இதை பார்த்து கோப்பி இவன் எதுக்கு இப்படி முறைச்சிகிட்டு நிற்கிறான் என குழம்பி போகிறார். மறுநாள் காலை வரை பாக்கியா மொட்டை மாடியில் அப்படியே நின்று கொண்டிருக்க காலையில் எழுந்ததும் ஜெனி மற்றும் வெள்ளி இருவரும் மேலே சென்று போய் பார்க்கின்றனர்.
இருவரும் கீழ வாங்க என கூப்பிட அவர் வந்துட்டாரா என கேட்கிறார். இந்த நேரத்தில் சரியாக கோபியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வர பாக்கியா கீழே இறங்கி செல்கிறார். அவரை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வருகின்றனர். கோபி உள்ளே வந்ததும் அவரை நிற்க வைத்து பாக்யா கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
அதற்கு முன்னதாக குடும்பத்தார் எல்லோரும் நீ எதுக்கு ஹாஸ்பிடலில் இருந்து நாங்க வருவதற்கு முன்னாடி வீட்டுக்கு வந்த? நீ போகும் போது எங்களுக்கு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல என கேட்கின்றனர். ஸ்கேன் எடுக்க பணம் நீதானம்மா கட்டின என கேட்க பாக்கியலட்சுமி என்று சொன்னாங்களா என பாக்யா கேட்கிறார். அவருடைய மனைவி நீ தானே என சொல்ல பாக்கியலட்சுமி சொன்னாங்களா என மீண்டும் கேட்க அனைவரும் எதுவும் புரியாமல் அதிர்ச்சியாக நிற்கின்றனர்.
இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…