கோபிக்கு காத்திருந்த ஷாக். ராதிகா சொன்ன வார்த்தை. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியம் மற்றும் பழனிச்சாமி இருவரும் வந்து கம்ப்ளைன்ட் கொடுத்தவரின் போட்டோவை காட்ட பாக்யா இவர்தான் 2 லட்சம் ரூபாய் தரும் காண்ட்ராக்ட் கொடுத்தது என்று கேட்டது என்று கூறுகிறார்.

பிறகு பாக்கியா எனக்கு நம்பிக்கை இருக்கு இதிலிருந்து நிச்சயமா வெளியே வருவேன் என பேசிக்கொண்டு இருக்கேன். அங்கே என்ட்ரி கொடுக்கும் கோதண்டம் அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது, கேட்டதுமே காண்ட்ராக்ட்ல கொடுத்து இருந்தா இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்குமா என்று சொல்லவில்லை செழியன் ஆகியோர் அடிக்கப் பாய ராமமூர்த்தி தடுத்து நிறுத்துகிறார்.

பிறகு கேண்டினை ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்து சோதனை நடத்த பத்திரிக்கையாளர்கள் ஒன்று கூடி என்னாச்சு என்று கேட்க கேண்டின்ல எந்தவித தவறும் நடக்கவில்லை. எல்லாம் சுத்தமாக தான் இருக்கிறது என்று சொல்ல கோதண்டம் அதிர்ச்சி அடைகிறார்.

அது எப்படி நான்தான் கம்பளைண்ட் கொடுத்தேன் போட்டோ ஆதாரம் கூட இருக்கு என்று சொல்லிக் காட்ட பாக்யா இங்க வாங்கினதற்கான பில் எங்கே என்று கேட்க பில்லை கிழித்து போட்டு விட்டதாக சொல்கிறார்.

அதன் பிறகு பொருட்காட்சிக்கான பில் எங்கே என்று கேட்க அதுவும் இல்லை என சொல்கிறார். சரிங்க போன் நம்பர் சொல்லுங்க அத வச்சு தான் பில் போட்டு இருப்போம் என்று கேட்க கோதண்டம் அங்கிருந்து தப்பி ஓடுகிறார். பிறகு இனிமேல் கேண்டின் திறந்து நடத்தலாம் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி அதிகாரிகள் கிளம்பி செல்கின்றனர்.

வீட்டில் கோபி இதெல்லாம் பெரிய பிரச்சினையாகும் அந்த ஈஸ்வரி யார் அப்படின்னு கேட்டு உங்களுக்கு கூட பிரச்சினை வரலாம் என்று ஈஸ்வரியை ஏற்றி விட அவர் பதறுகிறார். அதைத்தொடர்ந்து செழியன் மற்றும் ராமமூர்த்தி வீட்டுக்கு வர ஈஸ்வரி என்னாச்சு என்று கேட்க அன்புள்ள சந்தோஷப்படுற மாதிரி எதுவும் நடக்கல என ஷாக் கொடுக்கிறார்.

அதாவது பாக்கியா கேன்டீன்ல எந்த பிரச்சினையும் இல்லை எல்லாம் தரமானதாக தான் இருக்குன்னு அதிகாரிகளே சொல்லிட்டாங்க. உன்ன விட இப்ப கிடைச்சது தான் பெரிய விளம்பரம் இனிமேதான் கேண்டின்ல வியாபாரம் பிச்சுகிட்டு போகும் என்று கூறுகிறார்.

இதைக் கேட்டு ராதிகா ரொம்ப சந்தோஷம் என சிரித்து விட்டு உள்ளே போக கோபி கடுப்பாகி பின்னாடியே செல்கிறார். நீ எதுக்கு சிரிச்ச என்று கேட்க நல்ல விஷயம் நடந்திருக்கு அதனால சிரிச்சேன் என்று சொல்கிறார். பாக்கியாவுக்கு மட்டும் இல்ல யாருக்கு நல்லது நடந்தாலும் நான் சந்தோஷப்படுவேன் அது தான் என்னுடைய இயல்பு என ராதிகா பதிலடி கொடுக்கிறார்.

அப்படின்னா நீ எதுக்கு பாக்யாவோட கேண்டின் காண்ட்ராக்ட்டை கேன்சல் பண்ண என்று கேட்க அத பண்ணதுனால தான் அவங்க இன்னைக்கு இவ்வளவு பெரிய காண்ட்ராக்ட் எடுத்து இருக்காங்க நான் உங்களுக்கு நல்லது தான் பண்ணி இருக்கேன் என்று கோபியை ஆஃப் ஆக்குகிறார் ராதிகா. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

2 hours ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

2 hours ago

தனுஷை விட பெரிய நடிகர்கள் இல்லையா? – கஸ்தூரி ராஜா ஆவேசம்

72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…

2 hours ago

பிறந்தநாளில் தனது 5 ஆண்டு கனவு திட்டத்தை அறிமுகப்படுத்திய சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…

2 hours ago

இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…

2 hours ago

The India Story Official Trailer

The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…

22 hours ago