Baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் நல்லபடியாக நடந்து முடிய எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாக்யாவுடன் படிக்கும் பெண்மணி ஒருவர் எல்லோரையும் பார்த்துட்டேன் உங்க ஹஸ்பண்ட் எங்கே என கேட்க பிறகு பாக்கியா இருவருக்கும் விவாகரத்தான விஷயத்தை சொல்கிறார்.
அதன் பிறகு நண்பர்கள் கிளம்பும்போது பழனிச்சாமி பாக்யாவின் தன்னம்பிக்கையை பாராட்டி அவரிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்க அப்போது காய்கறி வாங்க வெளியே வரும் கோபி இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பக்கத்திலேயே எழில் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து டேய் உங்க அம்மாவை பாருடா என புலம்புகிறார். ஆனாலும் கோபி எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து நகர்கிறார்.
அடுத்து இனியா வீட்டுக்கு கிளம்பும்போது இப்பதான் உன்னுடைய அருமை எனக்கு புரியுது நீ ரொம்ப நல்ல அம்மா, மிஸ் யூ என சொல்லி முத்தமிட்டு வீட்டுக்கு கிளம்ப பாக்யா கண்கலங்குகிறார். இனிய ஏண்டா அப்படி சொன்னா அவ நல்லா இருக்காளா அவளுக்கு அந்த வீட்டில ஏதாவது பிரச்சனையா என கஷ்டப்பட இதில் ஆறுதல் சொல்ல ஈஸ்வரி அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இருக்காது அதான் அவ கூட அவருடைய தாத்தா இருக்காருல என சொல்கிறார்.
இந்தப் பக்கம் ராதிகா கோபியை சாப்பிட கூப்பிட கோபி இனியா வரட்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு இனியா இன்னும் வரல அவ அந்த வீட்டுக்கு போனா அங்கேயே தங்கிடுவாள்னு பயமா இருக்கு என சொல்ல அப்படின்னா எதுக்கு அவளை அங்க அனுப்புறீங்க.? ஏதாவது காரணம் சொல்லிட்டு வாரத்துல மூணு நாள் அங்க போயிருடா, அங்கே எதுக்கு போகணும் போகக்கூடாது என்று சொல்லுங்கள் என சொல்லிக் கொண்டிருக்க அப்போது இனியா வந்து விடுகிறார்.
என்னை பத்தி என்ன போட்டு கொடுக்குறீங்க என சொல்ல உன்னை பற்றி நான் எதுக்கு போட்டு கொடுக்கணும் ஆமா நீ எதுக்கு அந்த வீட்டுக்கு போற? அங்கு தான் வேணான்னு சொல்லிட்டு இருக்காங்க இங்க ஓடி வந்த அப்புறம் எதுக்காக போற என கேட்க அங்கு எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு ஓடி வரல டாடி வேணும்னு இங்க வந்தேன் என்று கூறுகிறார் இனியா.
நாங்க போகக்கூடாது என்று சொல்ல நீங்க யாரு என கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்க ராமமூர்த்தி தலையிட்டு நீ ஏன் அவளை அங்க போகக்கூடாது என்று சொல்ற அது சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு என கேட்டு ஷாக் கொடுக்கிறார். எதுக்கு சண்டை போட்டு எல்லாருடைய சந்தோஷத்தை கெடுக்கிற என கேட்க நான் உங்க சந்தோசத்தை கெடுக்குறேனா? நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்க நான் தான் சந்தோஷம் நிம்மதி இல்லாம இருக்கேன் என ராதிகா சொல்கிறார்.
மேலும் ராமமூர்த்தி நான் அன்னைக்கே இந்த கல்யாணம் பண்ணாதனு தலப்பா டா அடிச்சுக்கிட்ட என் பேச்சை கேட்டியா என சொல்ல பாத்தீங்களா உங்க அப்பா என்ன சொல்றாரு என கோபியிடம் சண்டைக்கு போக கோபி கொஞ்சம் அமைதியா இரு என ராதிகாவை சொல்ல நான் தான் அமைதியா இருக்கணுமா? இவங்கள எதாவது சொல்றீங்களா என சண்டை போடுகிறார். இதனால் கோபி செய்வதறியாது தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…