3 மொழி படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகர் பிரபாஸ் சம்பளமாக ஒரு பில்லியன் கேட்டுள்ளார். அதாவது 100 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் இரண்டாம் பாகங்களில் இரு வேடங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானார்.
இந்தப் படத்திற்குப் பின்பு, இவரது மார்க்கெட் ரேட் எகிறியுள்ளது. விஜய்லாந்தி என்ற பட நிறுவனம் தனது பொன்விழா ஆண்டையொட்டி தயாரிக்கும் முதல் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த நடிகர்திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.
‘பிரபாஸ் 21’ என்று இந்தப் படத்திற்கு தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்திலும் பிரபாஸ் இரட்டை வேடத்தில் உள்ளார்.
இந்தியாவிலேயே ரஜினிகாந்த் தான் ‘தர்பார்’ படத்திற்கு 70 கோடி சம்பளம் பெற்றிருந்த நிலையில் அவரைத் தாண்டி பிரபாஸ் 100 கோடி சம்பளம் கேட்டிருப்பது சக நடிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…