atlee about vijay and sharukhan
“தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ, மெர்சல், தெறி, பிகில் என விஜய்க்கு பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான ‘ஜவான்’ திரைப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து ஒட்டுமொத்த பாலிவுட் படங்களின் வசூலை ஓரம்கட்டியுள்ளது. இந்த வெற்றி மூலம் அட்லீ உலக புகழ் பெற்ற இயக்குனராக இடம்பெற்றுள்ளார்.இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அட்லீ, விஜய் மற்றும் ஷாருக்கான் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, விஜய் – ஷாருக்கான் இருவரில், ஒருவர் என்னுடைய அம்மா. ஒருவர் என்னுடைய மனைவி. இரண்டு பேர் இல்லாமலும் நம்மால் வாழமுடியாது. இன்று நான் இங்கு இருப்பதற்கு காரணம் விஜய் சார் தான்.
அவர் எனக்கு அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்தார். நான் அவருக்கு வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறேன். ஆனால், அவர் என்னை மிகவும் நம்பினார். ஷாருக்கான் படம் நடிக்க நினைத்தால் உலகத்தில் உள்ள எத்தனையோ இயக்குனர்கள் வருவார்கள். ஆனால் அவர் என்னை நம்பினார். இன்றுவரை அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவரது நம்பிக்கைதான் என்னை மிகுந்த பொறுப்புடனும் அன்புடனும் படத்தை செய்ய வைத்தது\” என்று பேசினார்.”,
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…