arrahman open speech in maamannan success meet
தமிழ் சினிமாவில் பிரத்தியேகமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்து முன்னணி இயக்குனராக இடம் பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து அவரது இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த ஜூன் 29ஆம் தேதி “மாமன்னன்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ள நிலையில் இதன் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் நேற்று செலிபிரேட் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் மனம் திறந்து பேசியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், “மாமன்னன் திரைப்படத்தின் கதை 20, 30 வருடமாக எனக்குள் இருந்த ஆதங்கம். என்னால் இசையில் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் அதை யார் செய்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். படத்தில் வடிவேலுவின் ஒரு காட்சி பார்த்தேன் அப்போதே இந்த படத்தை சிறப்பாக பண்ணுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக” கூறியிருக்கிறார்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…