"Are you all God? How much I have worshipped you!" - Selvaraghavan's post
“நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன்!”- செல்வராகவனின் பதிவு
தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது, மெண்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி-2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். நடிகராகவும் கமிட் ஆகி வருகிறார்.
இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து, செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கீதாஞ்சலி ‘மாலை நேரத்து மயக்கம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு, தன் கணவர் செல்வராகவனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாவிலிருந்து கீதாஞ்சலி நீக்கியுள்ளார். இவர்கள் விரைவில் விவாகரத்து செய்ய போகிறார்களா எனவும் சில தினங்களாக இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில், செல்வராகவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு வைரல் ஆகி இருக்கிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
‘திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள். அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் மலை, பனியாய் போகும். அனைத்தும் சரியாகி விடும்.’ என சூகமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு யாருக்கானது எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…