நடிகை அஞ்சலி பாட்டிலீடம் 5 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பல்.போலீஸ் நடவடிக்கை

தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் நடித்தவர் அஞ்சலி பாட்டீல். இவர் ‘குதிரைவால்’ என்ற படத்திலும் நடித்து உள்ளார். மேலும் இந்தி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 36 வயதான அஞ்சலி பாட்டீல் மும்பை அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை அஞ்சலி பாட்டீலுக்கு கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் போன் செய்துள்ளார். அவர் உங்களது பெயரில் வெளிநாட்டில் இருந்து வந்த பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகவும், அதை சுங்க துறையினர் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுமாறு கூறினார்.

இதைத்தொடர்ந்து ஸ்கைப் மூலமாக மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என பானர்ஜி என்ற பெயரில் ஒருவர் நடிகை அஞ்சலி பாட்டீலை தொடர்பு கொண்டார். அவர் நடிகையிடம் உங்களது 3 வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்து இருப்பதாகவும் இதுகுறித்து சரிபார்ப்பு பணி செய்ய ரூ.96 ஆயிரத்து 525-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதைகேட்ட நடிகை அஞ்சலி பாட்டீல் யோசிக்காமல் அவர் கேட்ட பணத்தை ஜிபே மூலம் அனுப்பினார். பின்னர் அவர் வங்கி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், அதுகுறித்து விசாரிக்க மேலும் ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 291-ஐ செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அந்த பணத்தையும் நடிகை அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில் அஞ்சலி பாட்டீல், சம்பவம் குறித்து தனது வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்தார். அவர் இது மோசடியாக இருக்கலாம் என நடிகையிடம் கூறியுள்ளார். இதையடுத்து நடிகை அஞ்சலி பாட்டீல், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகையிடம் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Anjali patil latest update viral
jothika lakshu

Recent Posts

ரஜினி, கமல் படத்தில் திரிஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

17 hours ago

மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “த்ரிஷ்யம்”. குடும்பத் த்ரில்லராக வெளியான…

17 hours ago

ராம் சரணின் “பெத்தி” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பெத்தி”. பெரும் எதிர்பார்ப்பில்…

17 hours ago

ராமர், கிருஷ்ணரைப் பார்த்ததில்லை; மோடியை பார்க்கிறேன்! தெலுங்கு நடிகர்

இந்திய திரையுலகில் நடிகர், வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பன்முக திறமையுடன் திகழ்பவர் தனிகெல்லா பரணி. தெலுங்கு சினிமாவைத் தாண்டி…

17 hours ago

“அந்த காலத்திலேயே விஜய் மிகப்பெரிய ஸ்டார்” – பிரியங்கா சோப்ரா

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் “தமிழன்” திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா…

17 hours ago

சினிமா முதல் அரசியல் வரை.. முதல்வர் விஜய் வாழ்வில் கடந்து வந்த பாதை – ஓர் பார்வை!

1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…

2 days ago