நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித் ஒரு ஹிந்தி தொலைக்காட்சிக்கு மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். பத்ம பூஷன் விருதுக்காக டெல்லி சென்றிருந்த அவர், அந்த சேனலுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். எப்போதும் போல, தன்னை சூப்பர் ஸ்டார் என்றோ அல்லது ரசிகர்கள் அன்போடு அழைக்கும் “தல” என்றோ குறிப்பிட வேண்டாம் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த பேட்டியின் முக்கிய அம்சமாக அமைந்தது, தனது மனைவி ஷாலினி குறித்து அவர் உருக்கமாகப் பேசியதுதான். ஷாலினி தனக்காக பல தியாகங்களைச் செய்திருப்பதாகவும், அவரே தனது வலிமையின் தூண் என்றும் அஜித் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
“நான் எப்போதும் சரியான முடிவுகளை எடுத்ததில்லை. பல சமயங்களில் தவறான பாதையில் சென்றிருக்கிறேன். ஆனால், ஷாலினி கடினமான காலங்களில் கூட எனக்கு உறுதுணையாக இருந்தார். என்னை ஒருபோதும் ஊக்கமிழக்கச் செய்யாமல், என் கூடவே நின்றார். நான் இன்று அடைந்திருக்கும் அனைத்து வெற்றிகளுக்கும் முழு காரணம் அவர்தான். அந்த கிரெடிட்டை நான் அவளுக்கே கொடுக்கிறேன்,” என்று அஜித் உணர்ச்சிப்பூர்வமாக கூறினார்.
அஜித்தின் இந்த பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், தனது மனைவியின் தியாகத்தையும் ஆதரவையும் வெளிப்படையாகப் பாராட்டிய அவரது பண்பு பலரையும் கவர்ந்துள்ளது. ஷாலினி மீதான அவரது அன்பும் மரியாதையும் இந்த வார்த்தைகளில் வெளிப்பட்டது. அஜித் – ஷாலினி ஜோடி திரையுலகில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள் என்பதை இந்த பேட்டி மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. அஜித் தனது அடுத்தடுத்த படங்களில் மேலும் பல சாதனைகளை படைக்க அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…