“பொண்டாட்டி கிட்ட தோத்தா ஜெயிச்சிடலாம்”: கணவர் குறித்து ரோஜா

தென்னிந்திய திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கியவர் ரோஜா. இயக்குநர் செல்வமணியை கரம்பிடித்து இல்லற வாழ்க்கையில் இணைந்த இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வெள்ளித்திரையில் ஜொலித்த ரோஜா, பின்னர் அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தார். ஆந்திர மாநில அமைச்சராகவும் திறம்பட பணியாற்றி வருகிறார்.

சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள ரோஜா, சமீபத்தில் பொது மேடை ஒன்றில் தனது கணவர் செல்வமணி குறித்து சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய ரோஜா, தங்களது இல்லற வாழ்க்கையில் யார் அதிகம் சண்டை போடுவது என்பது குறித்து வெளிப்படையாகப் பேசினார். “பொதுவாக சண்டை போடுவது நான் தான். ஆனால் செல்வமணி சார் அப்படி இல்லை. அவருக்கு கோபம் வந்துவிட்டால், அமைதியாக அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்வார். கோபம் தணிந்த பிறகே வெளியே வருவார்” என்று அவர் கூறினார்.

இதற்கான காரணத்தையும் ரோஜா விளக்கினார். “அவர் என்னை திட்டினால் நான் அழுதுவிடுவேன். பிறகு என்னை சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். இதெல்லாம் அவருக்குத் தெரியும். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால், மனைவியிடம் தோற்றுப் போங்கள். மனைவியுடன் சண்டை போட்டால் வீட்டில் சண்டை நடந்துகொண்டே இருக்கும். வெளியே சென்று எதையும் சாதிக்க முடியாது” என்று ரோஜா தனது கணவர் குறித்த புரிதலையும், இல்லற வாழ்க்கையின் தத்துவத்தையும் நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் ஆழமாகவும் வெளிப்படுத்தினார்.

ரோஜாவின் இந்த வெளிப்படையான பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. தம்பதிகளுக்கிடையேயான புரிதலும் விட்டுக்கொடுத்தலும் எவ்வளவு முக்கியம் என்பதை ரோஜாவின் இந்த பேச்சு உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

1 day ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

1 day ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

1 day ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

1 day ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

1 day ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

1 day ago