அம்மாவின் ஆசையை ஏற்று உருக்கமான பதிவை வெளியிட்ட ஜான்வி கபூர்

மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தின் இந்தி ரீமேக் காண குட் லக் ஜெர்ரி என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அவரது தந்தையான போனிகபூர் தமிழில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் அஜித்தின் துணிவு திரைப்படத்தையும் தற்போது அவர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுடில் பிரபல முன்னணி நடிகையாக வருவதற்கு கடினமாக முயற்சி செய்து வரும் ஜான்வி கபூர் தற்போது தனது அம்மாவின் கனவை நிறைவேற்ற காத்துக் கொண்டிருப்பதாக தகவலை பகிர்ந்திருக்கிறார்.

அதாவது நடிகை ஸ்ரீதேவி கௌரி ஷிண்டே இயக்கத்தில் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடிகர் அஜித் குமார் நடித்திருந்தார். தற்போது இந்த இயக்குனரின் இயக்கத்தில் எப்படியாவது தான் நடிக்க வேண்டும் என்று ஜான்வி கபூர் தெரிவித்திருக்கிறார். ஏனெனில் நான் என் அம்மாவிடம் பேசியபோது, அவர் நீ நிச்சயமாக கௌரி ஹிண்டேவுடன் ஒரு படம் பண்ண வேண்டும், அதுதான் தனது ஆசை எனக் கூறியிருந்தார். அதனால் அவரது இயக்கத்தில் நான் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறேன் என்று உருக்கமாக நடிகை ஜான்வி கபூர் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

actress janhvi kapoor wants to fulfill her mothers dream
jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

2 days ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

2 days ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

2 days ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

2 days ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

2 days ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

2 days ago