வாழ்த்து கூறிய மு க ஸ்டாலினுக்கு சூர்யா அளித்த நெகிழ்ச்சி பதில்

திரையுலகில் மிகப்பெரிய விருதுகளில் முக்கியமான ஒன்றுதான் “ஆஸ்கார் விருது”. இந்த விருது நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆஸ்கார் விருதின் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றனர். மேலும் இந்த ஆஸ்கார் கமிட்டியின் உறுப்பினர்கள் பற்றிய விவரம் ஆண்டு தோறும் மாறுபட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து ‘நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல்’ ஆகிய இருவரும் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆஸ்கார் குழுவில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நடிகர் சூர்யாவை பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் மு. க. ஸ்டாலின் அவர்கள் “தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கார் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!” என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு நடிகர் சூர்யா அவரின் ட்விட்டர் பக்கத்தில் தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்.. என்று மன நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார். இந்தப் பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் அசத்தும் லிஜோமோல் ஜோஸ்!

இயக்குநர் ஆதிரன் நாக்கெப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘தி ஒன் வித்தின் யூ’. கோயம்புத்தூரின்…

1 day ago

‘தலைவர் 173’ படத்தில் இணையும் பிரபல இயக்குநர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே…

1 day ago

அரசியலில் ஈடுபடும் எண்ணமே இல்லை – கேள்விக்கு மீண்டும் விளக்கம் அளித்த நடிகர் பாலா

சின்னத்திரையில் காமெடியன், நடனக் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத் திறமையுடன் ரசிகர்களை கவர்ந்து, தற்போது நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப்…

1 day ago

“விஜயை நேரில் சந்திப்பதைத் தவிர்த்தேன்…” – அர்ச்சனா கல்பாத்தி மனம் திறந்த பேட்டி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா…

1 day ago

“நூறு சாமி”-ல் கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார் விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் 'நூறு சாமி'. மாபெரும் வெற்றி பெற்ற…

1 day ago

NIZHAL OFFICIAL TRAILER

NIZHAL OFFICIAL TRAILER | TAMIL | JANANY KJ | VISHAKAN | ABUBAKKAR | AK KUMAR…

1 day ago