தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கன்னட நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மப்டி என்ற கன்னட படத்தை இயக்கிய நார்தன் இந்த படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.
மப்டி படம் தான் தமிழில் சிம்பு நடிப்பில் ‛பத்து தல’ என்ற பெயரில் ரீ-மேக்கானது. கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தை முதலில் நார்தன் தான் இயக்கினார். பிறகு சில பிரச்சனையால் வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவர கொண்டா. அதேபோல் தெலுங்கு தமிழ் என இரண்டிலும் முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி…
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…