Actor Sivakarthikeyan Complaint on Gnanavel Raja
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ள நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கியை தர வேண்டும் என்று கேட்டு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தன்னுடைய சம்பளத்தில் பாக்கியுள்ள 4 கோடியை தர வேண்டும். அதுவரை விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பில் இவரது தயாரிப்பில் உருவாகி வரும் படங்களை விநியோகிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் பிரபல தயாரிப்பாளர் எதிர்த்து இவ்வாறு வழக்குத் தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் உறவினரான ஞானவேல் ராஜா தயாரிப்பில் தற்போது விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் ஒரு திரைப்படம், சிம்புவின் நடிப்பில் 10 தல என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…