Actor Sivakarthikeyan Complaint on Gnanavel Raja
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டான் என்ற திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ள நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கியை தர வேண்டும் என்று கேட்டு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தன்னுடைய சம்பளத்தில் பாக்கியுள்ள 4 கோடியை தர வேண்டும். அதுவரை விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பில் இவரது தயாரிப்பில் உருவாகி வரும் படங்களை விநியோகிக்க தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் பிரபல தயாரிப்பாளர் எதிர்த்து இவ்வாறு வழக்குத் தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் உறவினரான ஞானவேல் ராஜா தயாரிப்பில் தற்போது விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் ஒரு திரைப்படம், சிம்புவின் நடிப்பில் 10 தல என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…