நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான குடும்ப பிரச்சனை, விவாகரத்து வழக்கு மற்றும் அதனைச் சுற்றிய சர்ச்சைகள் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் பின்னணி பாடகி கெனிஷாவின் பெயரும் அடிக்கடி பேசப்பட்ட நிலையில், சமூக வலைதளங்கள் மற்றும் நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது.
இந்நிலையில், கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ரவிமோகன், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனவேதனையுடன் பேசியதோடு, தொடர்ந்து வரும் விமர்சனங்களுக்கு கடுமையாக பதிலளித்தார். மேலும், விவாகரத்து தொடர்பான பிரச்சனைகள் முடியும் வரை நடிப்பில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், நடிகர் ரவிமோகன் தற்போது ஆன்மிக பயணத்தைத் தொடங்கியுள்ளார். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்து விரதத்தை ஆரம்பித்துள்ள அவர், ஆன்மிகத்தில் முழுமையாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரவிமோகன் எடுத்துள்ள இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அவர் முன்பு தெரிவித்ததுபோல் சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகி, ஆன்மிகப் பாதையை நோக்கி நகர்ந்து வருகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…