actor madhavan about the next movie update
தமிழ் சினிமாவில் பல பெண்களின் கனவு நாயகனாக உலா வந்தவர் நடிகர் மாதவன். இவர் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இப்படமானது இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மாதவன், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் இருவரும் நடித்திருந்தனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றிருந்தது.
இந்நிலையில் முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என்ற பெயரை வாங்கிய மாதவனிடம் அடுத்த படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர், “நடிப்பதில் தான் நான் இப்போது ஆர்வம் செலுத்தி வருகிறேன், படம் இயக்குவதில் எனக்கு இப்போது ஆர்வம் இல்லை. நான் ஒரு தற்செயல் இயக்குனர் இன்னொரு படத்தை இயக்க ஆவலாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாது” என்று கூறியுள்ளார்”. இவரது இந்த பதில் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…