வழிவிடுமா காலம்…. விஜய் சேதுபதிக்காக கதையுடன் காத்திருக்கும் சேரன்

பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக திருமணம் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு புதிய படத்தை இயக்குவதற்கான கதையை தயார் செய்துள்ளார். இந்த கதையை முன்னணி நடிகர்களிடம் சொல்ல நேரம் கேட்டும் அவர்கள் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சேரன் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி முன்வந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் இதன் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. தற்போது தவமாய் தவமிருந்து படத்தை இணையதளத்தில் பார்த்துவிட்டு பாராட்டியவருக்கு சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ள சேரன், “தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய் சேதுபதியோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை.

ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அண்ணன்களும், தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழிவிடுமா காலம்” என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. இது தவமாய் தவமிருந்து படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

Suresh

Recent Posts

லோகா : 19 நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த துல்கர் சல்மான்.!!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…

2 hours ago

இட்லி கடை படத்தின் கதை குறித்து வெளியான தகவல்..!

இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…

3 hours ago

மதராசி : 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

3 hours ago

விஜி கேட்ட கேள்வி, சூர்யா செய்த செயல், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…

4 hours ago

ஆறு வருடம் கழித்து வந்த விஜயா,முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை…

6 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…

20 hours ago