வருமானவரித்துறை சம்மன் – நடிகர் விஜய் நாளை ஆஜர்

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையின்போது ‘பிகில்’ திரைப்படம் வெளியானது. சுமார் ரூ.150 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்புக் குழு ரூ.300 கோடி வரை லாபம் சம்பாதித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். ஏ.ஜி.எஸ். நிறுவன அலுவலகங்கள், விஜய்க்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

பிகில் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருந்ததால் நெய்வேலி என்.எல்.சி.சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யை அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து பனையூரில் உள்ள அவரது பங்களாவில் வைத்து விசாரித்தனர்.

வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி ரொக்கம், நகைகள் மற்றும் 2 பைகள் நிறைய ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியது. ஆவணங்கள் மற்றும் காசோலைகள் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம், எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய, நடிகர் விஜய் உள்ளிட்ட மூவரும் 3 நாட்களுக்குள் ஆஜராகி, கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய், அன்புசெழியன், கல்பாத்தி அகோரம் ஆகியோர் 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதாக முதலில் தகவல் வந்தது. இன்று காலை வெளியான தகவல்படி இன்றே ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடலூர் என்.எல்.சி வளாகத்தில் நடைபெற்று வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிகிறது. இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானால் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதால் நாளை ஆஜராவார் என தெரிகிறது.

Suresh

Recent Posts

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

7 hours ago

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

7 hours ago

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

7 hours ago

முத்துவை அசிங்கப்படுத்திய அருண், சீதா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

9 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

10 hours ago

வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

24 hours ago