Rajinikanth
தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், சமீபத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை தான் நழுவவிட்டதாக, பிரித்விராஜ் சமீபத்திய பட விழாவில் தெரிவித்தது திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லூசிபர் படம் ரிலீசான சமயத்தில், ரஜினியிடமிருந்து அவரது படத்தை இயக்க வாய்ப்பு வந்தது. ஆனால் தான் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்ததால் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்ததாக பிரித்விராஜ் கூறினார்.
தான் யாருக்கும் மன்னிப்பு கடிதம் எழுதியதில்லை என்றும், ரஜினி படத்தை இயக்க முடியாமல் போனதற்கான காரணத்தை விளக்கி அவருக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும், அதனை அவர் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதாகவும் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…