amitabh bachchan
2018-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் வழங்கப்பட்டு வருகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி வருகிறார். இதில், சினிமா துறையில் பல்வேறு சாதனைகளை படைத்ததற்காக இந்தி திரையுலக ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அமிதாப்பச்சனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் இன்றைய விருது விழாவில் பங்கேற்க முடியாது என அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘கடுமையான காய்ச்சல் காரணமாக பயணம் செய்ய டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. எனவே இன்று டெல்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியாது.
இது துரதிர்ஷ்டவசமானது. எனது வருத்தங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிகப்பெரும் விருது, தாதா சாகேப் பால்கே விருது ஆகும். இது, ஒரு தங்க தாமரை பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கியதாகும்.
இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…