salman khan
கொரோனா ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. இந்தி நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.என்.திவாரி கூறும்போது, “எங்கள் அமைப்பில் மொத்தம் 5 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கஷ்டத்தில் உள்ள 25 ஆயிரம் பேருக்கு உதவுவதாக சல்மான்கான் கூறி இருக்கிறார்” என்றார்.
அதன்படி முதல் கட்டமாக தான் நடித்து வந்த ‘ராதே’ படத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவி வழங்கி இருக்கிறார். இந்த படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். இதில் திஷா பதானி நாயகியாக வருகிறார். ஷாக்கி ஷெராப், பரத் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த படத்தில் பணியாற்றிய லைட்பாய், அரங்கு அமைத்தவர்கள், கேமராமேன், உதவியாளர்கள், டிரைவர்கள், சமையல் தொழிலாளர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் சல்மான்கான் பணம் போட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…