Categories: Spiritual

குப்பையால் ஏற்படும் பல கஷ்டம் – வாஸ்து கூறும் அறிவுரை!

வீட்டில் குப்பைகளை இந்த இடத்தில் வைத்தால் பொருளாதார நஷ்டம் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வீட்டின் கட்டமைப்புகள் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்படுகிறது.வீட்டில் வைக்கக் கூடிய ஒவ்வொரு பொருளும் பல்வேறு சுப மற்றும் அசுப பலன்களை உருவாக்கும். அதனால் ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு கட்டமைப்பும் இருக்க வேண்டிய இடத்தை வாஸ்து சாஸ்திரம் சரியான முறையில் எடுத்துரைக்கின்றது.

வீட்டில் கூட்டி ஒதுக்கப்படும் குப்பைகள் கூட ஒருவரின் தலையெழுத்தை மாற்றும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஒரு குப்பையைச் சுத்தமாக நினைத்தால் வாழ்க்கையே மாற்றிவிடும் என்பதற்கு இந்த பதிவு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். குப்பையால் என்ன சிக்கல்கள் ஏற்படும் என வாஸ்து கூறுவதை இங்கே பார்க்கலாம்.

வீட்டில் குப்பைகளை கூட்டி ஏதோ ஒரு மூலையில் ஒதுக்க கூடாது என நமது முன்னோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறுவது உண்மைதான், அப்படி செய்தால் வீட்டில் கெட்ட செயல்கள் உண்டாக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

எப்படி இருந்தாலும் வீட்டில் இருக்கக்கூடிய குப்பைகளை கூட்டி மூலையில் தான் நம் தள்ளுகிறோம். அதுபோலவே வீட்டில் இருக்கக்கூடிய ஒரு சில மூளைகளில் குப்பைகளை வைத்தால் பொருளாதார ரீதியான கஷ்டம் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அப்படி எந்த மூலையில் குப்பைகளை தள்ளக் கூடாது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரம் பார்த்துக் கட்டுவது தான் வழக்கம். வீட்டில் இருக்கக்கூடிய படுக்கை அறை, குளியலறை, சமையலறை மற்றும் கதவு என அனைத்தும் வாஸ்து பார்த்துக் கட்டப்படுகிறது. அவ்வாறு கட்டினால் தான் வீட்டில் நன்மைகள் உண்டாகும் என நம்பப்படுகிறது.

தென்கிழக்கு மூலை தான் எப்போதும் அக்னி மூலையாகக் கருதப்படுகிறது. தென்கிழக்கு திசையில் பொதுவாகச் சமையலறை அமைக்கப்படுகிறது. சமையலறை இருக்கும் இடத்தில் கட்டாயம் குளியல் அறை இருக்கக் கூடாது.

அதற்குக் காரணம் என்னவென்றால் தொடர்ச்சியாக நீரின் பயன்பாடு எதுவும் சமையலறையில் இருக்கக் கூடாது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

அதுபோல தென்கிழக்கு மூலையில் குப்பைகளைக் கூட்டி ஒதுக்கக் கூடாது. அவ்வாறு குப்பைகளைக் கூட்டி ஒதுக்கினால் வீட்டில் சம்பாதிக்கும் பணமானது நீடிக்காது. எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் அந்த செல்வம் வீட்டில் தங்காது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

தொழில் கஷ்டம், பணக்கஷ்டம் மற்றும் குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் இதன் காரணமாகவே பெரும்பாலும் நடக்கிறது எனக் கூறப்படுகிறது. எனவே வீட்டில் இருக்கக்கூடிய தென்கிழக்கு மூலையில் குப்பைகளைக் கூட்டி ஒதுக்கி வைக்கக் கூடாது என்பதை மறந்து விடாமல் கடைப்பிடியுங்கள்.

 

admin

Recent Posts

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

16 hours ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

16 hours ago

100 நாட்களை நிறைவு செய்த ‘கருப்பு’ – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…

16 hours ago

90-களில் சென்னையில்தான் என் திரையுலகப் போராட்டம் தொடங்கியது – நடிகர் ரவி தேஜா நெகிழ்ச்சி

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…

18 hours ago

வசூலில் புதிய உச்சம் தொட்ட சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…

18 hours ago

Once More Official Trailer

Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…

2 days ago