கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த 24 -ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரபல நடிகர் சூரி பொது மக்களை மிகழ்விக்கவும் அதே நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தன் குடும்பத்தோடு இணைந்து தினம் ஒரு வீடியோ தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
நடிகர் சூரி வெளியிட்டு வரும் நகைச்சுவை கலந்த கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோக்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கொரோனா வைரஸ் நிவாரண உதவி தொகை ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.
மேலும் தனக்கு தொலைப்பேசி வாயிலாக அழைத்து உதவி கேட்கும் நலிந்த கலைஞர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார். உலகமே கண்டு அஞ்சும் கொரோனா வைரஸ் மிக விரைவில் இவ்வுலகிலிருந்து மறைய கடவுளை வேண்டி கொள்வதாகவும், அனைவரும் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றி இந்த இக்கட்டான சூழ்நிலையை வென்று வரவேண்டும் என்று நடிகர் சூரி கூறினார்.
இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…
தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…
சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…
பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…
புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…