Rajinikanth
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்கவும் வற்புறுத்தப்படுகிறது. விருந்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்துள்ளனர். கொரோனா தாக்கிய இந்தி பாடகி கனிகா கபூர், விருந்தில் பங்கேற்றதால் அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. கொரோனா ஊரடங்கில் நடந்த கன்னட நடிகர் நிகில் திருமணமும் சர்ச்சையானது. இந்த நிலையில் நடிகை ஒருவர் வீட்டில் விருந்து கொடுப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் அவரது வீட்டில் அதிரடியாக புகுந்து விசாரணை நடத்திய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
அந்த நடிகையின் பெயர் அனிதா ராஜ். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த தாய்வீடு படத்தில் கதாநாயகியாக நடித்து 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிரேம் கீத், ஸமீன், ஆஸ்மன், மாஸ்டர்ஜி, ஸாரா சி ஜிந்தகி உள்பட பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.
சினில் ஹிங்கோரானி என்பவரை காதலித்து திருமணம் செய்து மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கிறார். கொரோனா ஊரடங்கை மீறி அனிதா ராஜ் தனது வீட்டில் பெரிய கூட்டத்தை கூட்டி விருந்து கொடுப்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவரது வீட்டில் புகுந்து விசாரணை நடத்தினார்கள்.
அனிதா ராஜ் கூறும்போது, “நாங்கள் விருந்து நடத்தவில்லை எனது கணவர் மருத்துவர் என்பதால் பலர் சிகிச்சைக்கு வந்தனர்” என்றார். ஆனால் அவரது குடியிருப்பில் வசித்தவர்கள் விருந்துதான் கொடுத்தார் என்றனர்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…