ஆடிஷன் முடிந்தும் போட்டியாளராக மாறிய இலங்கை சிறுமி அசானி. எந்த நிகழ்ச்சி தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்க வந்தவர் அசானி.

இலங்கையில் கண்டி என்ற பகுதியை சேர்ந்த மலைவாழ் சிறுமியான இவரது குடும்பம் தேயிலை பறிக்கும் வேலையை செய்து வருகிறது, வெறும் எப். எம் ரேடியோவில் பாட்டு கேட்டு பாட கற்று கொண்ட இவர் சரிகமப ஆடிஷனில் பங்கேற்க முடியாமல் போனது. இதையடுத்து அப்பகுதி மக்களின் உதவியால் சென்னை வந்து நடுவர்களை சந்திக்க ஆடிஷன் முடிந்து விட்ட காரணத்தால் அவரது திறமையை நிரூபிக்க ஓரிரு வாரங்கள் பாடட்டும், பயிற்சி பெறட்டும் பிறகு என்ன செய்வது என்று யோசிக்கலாம் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எவர் கிரீன் ரவுண்ட் நடைபெற உள்ளது, இதில் அசானி ஊரு சனம் தூங்கிருச்சி என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார், மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த சிறுமி இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாடி நமக்கு பெருமை சேர்த்திருப்பதாக இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் பாராளமன்றத்தில் பேசிய வீடியோவை சரிகமப மேடையில் பதிவிட்டு அசானியை பாராட்டியுள்ளனர்.

அதன் பிறகு நடுவர்கள் அசானி இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்கலாமா? இல்லையா? என்பதை மற்ற போட்டியாளர்களின் பெற்றோர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்ல எல்லாரும் ஒருமனதாக அசானியை போட்டியாளராக அறிவிக்க அனுமதி அளித்துள்ளனர், அதன் பிறகு மேடைக்கு வந்த நடுவர்கள் அசானிக்கு மெடல் அணிவித்து போட்டியாளராக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனால் அசானி ஆனந்த கண்ணீர் விட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பலரும் போட்டியாளராகிய அசானிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அசானிக்கு இப்படியொரு வாய்ப்பை கொடுத்த ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்கள் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

jothika lakshu

Recent Posts

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

2 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

3 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

6 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

6 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

6 hours ago

‘ஓ ரோமியோ’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்..

'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…

6 hours ago