பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள்..! உறுதியான தகவல் வெளியிட்ட முக்கிய பிரபலம்

தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் இருவரும் முக்கிய நடிகர்களாக இருந்து வருகின்றனர். இவர்களது திரைப்படங்கள் சாதாரண நாளில் வெளியானாலே திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பது வழக்கம். அப்படியான நிலையில் பண்டிகை தினங்களில் வெளியானால் இன்னும் அதன் கொண்டாட்டம் கூடுதலாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

வரும் பொங்கலுக்கு அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. அதேபோல் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இரண்டு படங்கள் நேருக்கு நேராக மோதிக் கொள்ளுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அளித்த பேட்டி ஒன்று துணிவு மற்றும் வாரிசு என இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாவது உறுதி என தெரிவித்துள்ளார்.

ஆனால் துணிவு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வியாழக்கிழமை மற்றும் விஜயின் வாரிசு திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவித்துள்ளார். இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் திரையரங்குகள் சமமாக பிரித்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த வருடம் பொங்கல் தல தளபதி பொங்கலாக தான் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த பொங்கல் ரேஸில் ஜெயிக்கப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

thirupur subramanian about thunivu and varisu release update
jothika lakshu

Recent Posts

ஐ ஆம் கேம் – திரை விமர்சனம்

கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…

23 hours ago

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது சினிமா – நடிகை டாப்ஸி ஆதங்கம்!

சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

23 hours ago

இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…

23 hours ago

“சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” – நடிகர் பகவதி பெருமாள்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…

1 day ago

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…

1 day ago

திரையரங்குகளில் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்.. ஆரவாரத்துடன் கண்டுகளித்த அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…

1 day ago