thalapathy vijay latest fans met up news viral update
தமிழ் சினிமாவில் முக்கியமான உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு மேலாக “விலையில்லா விருந்தகம்” நடத்தும் 300க்கும் மேற்பட்ட ரசிகர்களை சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
அதன் பிறகு, சுமார் 2 மணி நேரம் ரசிகர்களிடம் உரையாடிய விஜய், இந்த உதவிகளை தொடர்ந்து செய்யுமாறும் மேலும் பணம் வேண்டும் என்றால் தன்னிடம் கேளுங்கள் உதவி செய்கிறேன் என்று அவர்களிடம் உறுதியளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள திட்டமிட இருப்பதாகவும், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் விஜய் கேட்டுக் கொண்டுள்ளாராம். இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…