நடிகர் சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரது சகோதரி நண்பர் மேலாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஹிந்தி நடிகர் சுஷாந்த்தின் சிங்கின் வங்கி கணக்கில் ரூபாய் 15 கோடி பணம் மோசடி செய்யப்பட்டதாக அவரது தந்தை கே.கே சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரில் சுஷாந்த்தின் தோழி ரியா சக்கரவர்த்தி, அவரது தாயார் சந்தியா சக்கரவர்த்தி, சகோதரர் ஜோவிக், சுஷாந்த்தின் மேலாளர் மிராண்டா, ஸ்ருதி மோடி ஆகியோர் மோசடியில் ஈடுபட்டு எனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்தார்.
இந்த பண மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கத் துறையினர் ரியா சக்கரவர்த்தியிடம் திங்கள்கிழமை சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சுஷாந்த்தின் மூத்த சகோதரி மீட்டு சிங், சித்தார்த் , வர்த்தக மேலாளர் ஸ்ருதி மோடி ஆகியோரிடம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். சுஷாந்த்தின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியது இதுவே முதல் முறை.
இதற்கிடையே சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா சக்கரவர்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக பீகார் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் மூன்று நாட்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…