suriya-salary-for-vikram-3
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது விக்ரம் திரைப்படம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் சூர்யா 10 நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்ற ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
விக்ரம் படத்தின் மூன்றாம் பாதத்தில் சூர்யாவை வைத்து திரைப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார். அதாவது விக்ரம் படத்தின் அடுத்த பாகம் உருவாவது உறுதி என தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சூர்யா இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்ததாக கூறிவந்த நிலையில் கமல்ஹாசன் அவர்களின் நன்றி கூறி வெளியிட்டுள்ள வீடியோவில் அதனை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.
அதாவது தன் மீது கொண்ட அன்பால் மட்டுமே சூர்யா இந்தப் படத்தில் நடித்தார் என கூறியுள்ளார். இதன் காரணமாக விக்ரம் 3 படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இதுவரை அவர் பங்கு அளவிற்கு மிக பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகர் சூர்யா ஒரு படத்திற்கு ரூபாய் 35 கோடி முதல் 45 கோடி வரை வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…