யாரையும் அவமதிக்கவில்லை – சூர்யா அறிக்கை

‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீதிபதி சந்துரு வக்கீலாக இருந்த போது நடத்திய ஒரு வழக்கில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது? என்பதே ‘ஜெய்பீம்’ படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் படத்தில் பேச முயற்சித்து இருக்கிறோம். பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளது போல எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கும், படக்குழுவினருக்கும் இல்லை.

ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இந்த திரைப்படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’, என்கிற அறிவிப்பை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்து இருக்கிறோம்.

எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன, பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு.

படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம். ஒருவரை (ஜெ.குருவை) குறிப்பிடுவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் சொல்லும் அந்த கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக சிலர் தெரிவிக்கிறார்கள். எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு எந்த பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடுவதாக கருதப்பட்டால் அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்ட குரல், பெயர் அரசியலால் மடை மாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

சகமனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதும் எல்லா தரப்பு மக்களின் பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Suresh

Recent Posts

“நான் சூனியக்காரியா..?” – முன்னாள் காதலரை நினைத்து வேதனை பகிர்ந்த கங்கனா ரணாவத்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் Kangana Ranaut, தற்போது அரசியலிலும் காலடி பதித்து எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். தமிழில் கடைசியாக…

1 day ago

விஜய்யின் ‘பஞ்ச்’ வசனம்… சத்யராஜ் சர்ச்சைக்கு சிபிராஜின் பதிலடி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், அரசியல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், Vijay தனது அரசியல் பயணத்தை…

1 day ago

மனதளவில் பாதிக்கப்பட்ட தருணம் – ஆர்.ஜே. பாலாஜி மனம் திறந்த பேச்சு

R.J.Balaji இயக்கத்தில், Suriya மற்றும் Trisha நடித்துள்ள புதிய படம் ‘கருப்பு’ மே மாதத்தில் வெளியாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தப்…

1 day ago

வா… வா… என் தேவதையே… குட் நியூஸ் சொன்ன அட்லீ!

தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் இயக்குநராக திகழும் Atlee மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். ராஜா ராணி, தெறி, மெர்சல்,…

1 day ago

பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியக் கொடி… சவாலான பந்தயத்தில் அசத்திய அஜித் குமார்!

திரைத்துறையில் மட்டுமல்லாமல், கார் ரேசிங் உலகிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் Ajith Kumar. நடிப்பைத் தாண்டி, அதிரடி கார்…

1 day ago

Kara Official Trailer

Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…

2 days ago