விஜயா வீட்டுக்கு வந்த ரோகினி. அதிர்ச்சியில் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாட்டி வீட்டில் மீனா நானே சமைக்கிறேன் என விறகடிப்பில் சமைக்க செல்கிறார்.

அடுத்து பாட்டி முத்துவுக்கு காபி கொடுத்து மனோஜ் பற்றி கேட்க மொத்த பணத்தையும் ஒரு பெண்ணிடம் ஏமாந்த விஷயத்தையும் திரும்பவும் கல்யாணம் நடக்க போகும் விஷயத்தையும் சொல்ல பாட்டி சிரிக்கிறதா வருத்தப்படுவதானே தெரியல என சொல்கிறார்.

ஆனா ஒன்னு மட்டும் மீனாவை கலங்க வச்சுட்டு போன பாவத்துக்கு நல்லா அனுபவிக்கிறான் என சொல்கிறார். பிறகு கட்டிக்கிட்டு வந்த பொண்ணு நல்லபடியா பாத்துக்கணும் அவன்தான் நல்ல புருஷனுக்கு அழகு என்று சொல்ல முத்து மீனாவை பார்க்கிறார். பிறகு முத்து பசங்களோட விளையாடிட்டு வரேன் என சொல்லி வெளியே கிளம்ப பாட்டி சீக்கிரம் வந்துவிடு என சொல்லி அனுப்புகிறார்.

மறுபக்கம் அண்ணாமலை பென்ஷன் விஷயமாக யூனியன் ஆபீஸ் கிளம்ப அந்த நேரம் பார்த்து ரோகினி தன்னுடைய தோழியுடன் வீட்டுக்கு வர விஜயா அவர்களை வரவேற்கிறார். பிறகு ரோகிணி பியூட்டி பார்லரை திறக்கப் போவதாக சொல்லி தாம்பூல தட்டில் பழம் வைத்துக் கொடுத்து விஜயா அண்ணாமலை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்.

பிறகு விஜயா இவர் கல்யாணத்தை சிம்பிளா கோவிலில் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார் என்ற விஷயத்தை சொல்ல ரோகிணி அங்கிள் சொல்றதும் சரிதானே வாழ்நாள் முழுக்க சம்பாதிக்கிற பணத்தை கல்யாணம் என்ற பெயரில் எதுக்கு ஒரே நாளில் செலவு பண்ணனும்? அங்கிள் சொல்ற மாதிரியே செய்யலாம் என சொல்ல பரவால்ல இந்த வயதிலேயே நல்ல மெச்சூரிட்டியா இருக்க என அண்ணாமலை பாராட்டுகிறார்.

பிறகு அண்ணாமலை மனோஜ் இருவரும் வெளியே கிளம்பியதும் விஜயா கல்யாணத்தை பத்தி உங்க அப்பா கிட்ட சொல்லிட்டியா என்று கேட்க ரோகிணி அவர் இந்த கல்யாணத்துக்கு வருவார்னா எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம் என சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். சரி நான் அத பத்தி கேட்கல நீ கவலைப்படாத என சொல்கிறார்.

இருந்தாலும் பணம் வராது போலையே என விஜயாவின் மனம் பரிதவிக்கிறது. அதன் பிறகு ரோகிணி வீட்டு கிளம்ப அவரது தோழி நீ போட்ட ட்ராமாவை நானே நம்பிட்டேன் அவ்வளவு அருமையா நடிக்கிற என சொல்லி சிரிக்கிறார்.

இங்கே பாட்டி வீட்டில் முத்து இன்னும் வராததால் பாட்டி நான் போய் அவனை கூட்டிட்டு வரேன் என வெளியே கிளம்ப நானே போய் கூட்டிட்டு வரேன் எப்படி போனும்னு மட்டும் வழி சொல்லுங்க, எனக்கும் ஊர சுத்தி பாக்கணும்ன்னு ஆசையா இருக்கு என்று சொல்லி மீனா கிளம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Sirakadikka Aasai Episode Update
jothika lakshu

Recent Posts

ஜனநாயகன் வெளியீடு எப்போது? வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

3 hours ago

அரசன் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

3 hours ago

அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. என்ன விஷயம் தெரியுமா?

அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…

3 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

5 hours ago

மனோஜை சந்தித்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

11 hours ago

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

1 day ago