ரவியை காதலிக்கும் நீத்து, கடுப்பான சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு முதல் திருமணம் ஆன குழந்தை பிறந்தற்கான சான்றிதழ்களையும் வழங்க ரோகினி வேறு வழியில்லாமல் திருமணமான குழந்தை இருந்ததையும் ஒத்துக்கொள்கிறார். ஆனால் இந்த விஷயத்தை நான் ஏற்கனவே மனோஜிடம் சொல்லிவிட்டதாக சொல்ல விஜயா மற்றும் வக்கீல் என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் இவை ஏதோ புதுசா திட்டம் போட்டா என்று முத்துமீனா சொல்ல மனோஜ் ரோகினி இடம் நீ எப்படி என்கிட்ட சொன்ன என்று கோபப்பட்டு பேசுகிறார் உடனே ரோகினி நாம் மனோஜ் விசாரிக்கணும் என்று சொல்ல நான்தான் கல்யாணின்னு உங்ககிட்ட சொன்னனா இல்லையா என்று கேட்க உடனே மனோஜ் ஆமாம் என்று சொல்லுகிறார் இது என்ன புதுசா இருக்கு இது இப்ப முடியுற மாதிரி தெரியல என்று ஜட்ஜ் சொல்லுகிறார். உடனே ரோகிணி கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த விஷயத்தை நான் மனோஜிடம் சொல்லிட்டேன். அவரு அவங்க அம்மாவுக்கு பயந்து தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்காரு. அவங்க தான் எங்களை பிரிக்க பாக்கறாங்க என்ன கொடுமை படுத்துவாங்க என சமைக்க சொல்லுவாங்க என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போக விஜயா ஒரு கட்டத்திற்கு மேல் கோபப்பட்டு ரோகினி சொல்ல போய் தாங்க முடியாமல் மயங்கி விழுந்து விடுகிறார். வீட்டுக்கு வந்த விஜயா ஜல்லி கரண்டி காய வைத்து மனோஜ்க்கு சூடு வைக்க போக அவர் தெரிந்து ஓடுகிறார்.

அவ உண்மையை உன் கிட்ட சொன்னாளா அப்ப நீ தான் என்கிட்ட மறைச்சியா என்று கேட்க அது பேய் என்று உளற என்னடா இப்படி உளறிக்கிட்டு இருக்க என்று விஜயா கோபப்படுகிறார் உடனே ஸ்ருதி இதுக்கு ஒரு ஐடியா இருக்கு ரோகிணிக்கு மனோஜ் போன் போட சொல்லி அவங்க கிட்ட இருந்து உண்மையை வர வச்சு அதை ரெக்கார்ட் பண்ணி காமிச்சா நிரூபிக்கலாம் என்று சொல்ல உடனே மனோஜம் ஃபோன் போடுகிறார் போன் ஸ்பீக்கரில் இருக்க மனோஜ் எதுக்கு இப்படி பொய் சொன்னேன் என்று கேட்க நான் எங்க மனோஜ் பொய் சொன்ன நான் உண்மைதான சொன்ன எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தானே அது உங்க குடும்பத்துக்கு தெரியும் தானே இதுல என்ன பொய் இருக்கு என்று கேட்டு ரோகிணி குடும்பத்தினரை கோபத்துக்கு ஆளாக்குகிறார் உடனே ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த விஜயா நீ நேர்ல மட்டும் இருந்த நான் உன்னை செருப்பால அடிப்பேன் என்று சொல்லி வாசலில் இருக்கும் செருப்பு எடுத்துக் கொண்டு வந்து போனின் மீது அடிக்கிறார். உடனே நேர்ல இருந்த அவ்வளவுதான் என்று விஜயா மிரட்ட ரோகினி சாந்தமாக பேசுவது போல நடிக்கிறார். உடனே அண்ணாமலை போனை வாங்கி கட் பண்ணி விட இப்போ பார்லர் அம்மா பக்கம் திருப்பி விட்டுடுச்சு இது அப்படியே பார்லர் அம்மா ரெக்கார்ட் போட்டு கோர்ட்டில் காமிச்சா நம்மளுக்கு எதிரா திரும்பிடும் என்று சொல்ல விஜயா அமைதியாகி விடுகிறார் ரோகிணி என்கிட்டே உங்க வேலைய காட்டுறீங்களா என்று யோசித்துக் கொண்டு தனியாக சிரித்து பேச ரோகிணி நம்ம வந்து மளிகை சாமான் சமைக்கிறதுக்கு பணம் இல்ல கொடு என்று சொல்லுகிறார்.

என்கிட்ட மட்டும் எங்க இருக்க வளையல் தான் இருக்கு என்று சொல்லி சிந்தாமணிக்கு போன் போட்டு ஒரு லட்சம் பணத்தை கேட்கிறார் சிந்தாமணி உடனே தயங்க நீங்க சும்மா எல்லாம் கொடுக்க வேண்டாம் என்கிட்ட வலையல் இருக்கு அதை வச்சு கொடுங்க என்று சொல்ல சரி நான் ஒரு பைனான்சியர் கிட்ட ஏற்பாடு பண்ணி கொடுக்கிறேன் என சொல்லி அவரது பணத்தையே வட்டிக்கு கொடுக்கிறார். மறுபக்கம் சிந்தாமணியின் மகள் வந்து சந்திக்க ஆர்டர் வாங்க போகும் விஷயத்தை சொல்ல ரேகா கோபப்படுகிறார் ஏற்கனவே உங்களுக்கு எத்தனை கடை இருக்கு இப்ப எதுக்கு புதுசா அதுவும் மேனேஜரை மிரட்டி எதுக்கு பண்ண சொல்றீங்க இது மாதிரி எல்லாம் பண்ணா எனக்கு பிடிக்காது பெத்தவங்க பண்ற பாவம்தான் பிள்ளைங்களுக்கு நான் எப்படி அனுபவிக்க போறேன்னு தெரியல என்று சொல்ல ஏமா இப்படி எல்லாம் பேசுற என்று சொன்னவுடன் அப்ப நான் இந்த ஆர்டரை மீனா ஓகே விட்டுருங்க என்று ரேகா சொல்ல சிந்தாமணியும் வேறு வழி இல்லாமல் சம்மதித்து விடுகிறார் மறுபக்கம் மீனா முத்துவிடம் என்ன அந்த ஆர்டர் கொடுக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போறீங்களா என்று சொல்ல கூட்டிட்டு மட்டும் இல்ல போயிட்டு முடிச்சுட்டு ஆர்டர் ஓட தான் உன்னை கூட்டிட்டு வருவேன் என்று சொல்லுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் அந்த மேனேஜரை மீனாவுக்கு போன் போட்டு சிந்தாமணி போட்டியில் இருந்து விலகியதால் உங்களுக்கே ஆர்டர் கிடைச்சிடுச்சு என்று சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார்.

உடனே முத்து விட விஷயத்தை சொல்ல அவர் மீனாவை தூக்கி சந்தோஷப்பட அண்ணாமலை விஜயா மனோஜ் என அனைவரும் வர அவர்களிடம் விஷயத்தை சொல்லுகின்றனர் ஸ்ருதி வந்தவுடன் மீனா பூ ஆடர் என்று ஆரம்பிக்க ஸ்ருதி மீனாவை கட்டிப்பிடித்து அழுகிறார் என்னாச்சு என்று கேட்டுக் கொண்டிருக்கிற அழுது கொண்டிருந்த ஸ்ருதி போனை எடுத்துக்காட்டுகிறார். அதில் நீத்துவின் போனில் ரவியும் நீத்துவும் இருக்கும் புகைப்படத்தை போட்டு காதலில் விழுந்து விட்டேன் என்று பதிவிட்டு இருப்பதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர் உடனே சுருதி சும்மா விடமாட்டேன் என்று சொல்லி நினைத்து ஹோட்டலுக்கு செல்ல பிறகு என்ன நடக்கிறது? நீத்து என்ன சொல்லுகிறார் ?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 24-01-26
jothika lakshu

Recent Posts

Niram Tamil Movie Trailer

Niram Tamil Movie Trailer | Mugen Rao & Preethi Asrani | Balaram Krishna | Zee…

4 hours ago

Ramayana Tamil Trailer

Namit Malhotra’s Ramayana Tamil Trailer | Nitesh Tiwari | Ranbir, Yash, Hans Zimmer, A.R.Rahman

4 hours ago

Ekavali Lyrical Video

Ekavali Lyrical Video | Renigunta 2 | Sid Sriram | Johnny | Shali Nivekas |…

4 hours ago

Kalavaadum Kanna Video Song

Kalavaadum Kanna Video Song | Address | Pradeep Kumar | Girish | Atharvaa, Esakki Bharath…

4 hours ago

தனுஷ் அரசியலுக்கு வந்தால் தமிழக அரசியல் மாறுமா? ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் பரபரப்பு கணிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…

6 hours ago

“மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம்” – பொதுமக்களுக்கு இளையராஜா அழைப்பு

இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…

6 hours ago