அண்ணாமலை சொன்ன வார்த்தை, பயத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் அந்த வீட்டிலேயே இருக்கட்டும் நீ உண்மையை சொல்லிடு கல்யாணி என்று சொல்ல நான் உண்மைய சொன்னா நான் மட்டும் இல்ல கிருஷ் அந்த வீட்ல இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு ரோகிணி பணத்தை கொடுத்துவிட்டு ஒழுங்கா நாளைக்கு கிளம்புற வழியை பாரு நான் ஸ்கூல் மாத்தணும் வீட்டை மாத்தணும் நான் அதை பத்தி ஏதாவது யோசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுநாள் காலையில் முத்து கிரிஷ்க்கு புது டிரஸ் போட்டு ரெடி பண்ணி ஹாஸ்பிடலுக்கு கூட்டி வருவதற்காக ரெடியாகி கொண்டிருக்க விஜய் அண்ணாமலை வருகின்றனர். உடனே விஜயா என்னமோ இவங்க குழந்தை மாதிரி ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க பணத்தை எப்படி செலவு பண்றதுன்னு தெரியல என்று சொல்லுகிறார்.

உடனே க்ரிஷ் அண்ணாமலை இடம் நான் எங்க வீட்டுக்கு போற தாத்தா என்று சொல்ல அண்ணாமலை கட்டிப்பிடித்து இவ்வளவு நாள் உன் கூட இருந்தது சந்தோஷமா இருந்தது என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார் பிறகு நான் உனக்கு ஒன்னு தரேன் என்று சொல்லி ரூமுக்கு சென்று திருக்குறள் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து இதுல குரலோடு சேர்த்து அதிகாரமும் இருக்கு டெய்லி ஒன்னு ஒன்னு படி என்று சொல்ல படிக்கிறேன் தாத்தா என்று சொல்லுகிறார் பிறகு விஜயாவிடம் பாட்டி என ஆரம்பிக்க விஜயா மிரட்டுகிறார். உடனே கிருஷ் முத்து மீனாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு வர ரவியும் வருகின்றனர் அவர்கள் கிருஷுக்கு டிரஸ் எடுத்துக் கொண்டு வந்த கொடுக்க அதனை வாங்கிக் கொண்டு தான் சொல்லுகிறார்.

மனோஜிடமிருந்து நான் கிளம்புறேன் என்று சொன்ன திரும்பவும் நீங்க வரக்கூடாது உங்க பாட்டி அட்மிட் பண்ணா ஹாஸ்பிடல் தான் இருக்கணும் என்று சொல்ல ரவி என்னடா இப்படி பேசிகிட்டு இருக்க என்று சொல்ல அவன் மூளை இல்லாதவன் அப்படித்தான் பேசுவான் என்று முத்து சொல்லுகிறார் விஜயா மனோஜ் தான் இந்த வீட்ல கரெக்டா இருக்கா என்று சொல்லுகிறார் உடனே கிரிஷ் ரோகிணிக்கு முத்தம் கொடுத்துவிட்டு கிளம்ப விஜயா பார்த்தவுடன் விஜயாவுக்கும் முத்தம் கொடுத்துவிட்டு ஹாஸ்பிடலுக்கு வருகின்றன. இவர்கள் வந்து உள்ளே பார்க்க ரோகினி அம்மா இல்லாததால் அதிர்ச்சியாகின்றனர் கொஞ்ச நேரத்தில் ரோகினி வந்துவிட இவர்களை பார்த்து விட்டு மறைந்து கொள்கிறார். நர்சிடம் விசாரிக்க அவங்க நேத்து நைட் டிஸ்சார்ஜ் ஆகிட்டாங்க என்று சொல்லுகிறார். உடனே ரோகினி அதிர்ச்சியாகி கிளம்பிட்டாங்களா என்று யோசிக்கிறார் பிறகு கிருஷ் பாட்டிய பாக்கணும் என்று சொல்ல சரி டாக்டர்கிட்ட விசாரிப்போம் என சொல்கின்றனர்.

பிறகு ரோகிணி ஷோரூம் வந்து அம்மா எங்க போயிருக்காங்க என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார் மனோஜ் வந்து வேலையை சொல்ல எதுவும் கேட்காமல் இருக்க உனக்கு என்ன ஆச்சு என்று மனோஜ் கேட்கிறார் அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லிவிட்டு ரோகிணி வேலை பார்க்க ஆரம்பிக்கிற உடனே கொஞ்ச நேரத்தில் போன் போட்டு பார்க்க சுவிட்ச் ஆஃப் என வருகிறது உடனே கொஞ்ச நேரத்தில் வேலை செய்யும் ஆள் ஒருவர் வந்து எங்க பாட்டி இறந்துட்டாங்க லீவு என்றால் வேண்டுமென சொல்ல எப்படி இறந்தார்கள் என்று மனோஜ் கேட்க அவங்கள ரெண்டு நாளா காணும் அப்புறம் எங்க ஊர் கடல்ல விழுந்து இறந்துட்டு இருக்காங்க என்று சொல்ல ஒருவேளை கிருஷ் வீட்ல இருக்கணும்ங்கறதுக்காக அம்மா தப்பான முடிவு எடுத்து இருப்பாங்களா என்று யோசித்து விட்டு பிறகு நான் வீட்டுக்கு போறேன் மனோஜ் எனக்கு தலை வலிக்குது என்று சொன்ன சரியில்ல கூட்டிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு செல்கின்றன.

மறுபக்கம் முத்து ஹாஸ்பிடல் வந்து என்ன விசாரிக்கிறார்? வீட்டில் விஜயா மற்றும் மனோஜ் என்ன பேசுகின்றனர்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 11-08-25
jothika lakshu

Recent Posts

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

9 hours ago

Bison – Poison ? Ameer Speech Bison Thanks Meet

https://youtu.be/hvOcBNB9q5M?t=1

11 hours ago

Mari Selvaraj Speech Bison Thanks Meet

https://youtu.be/V8EF1lKofzs?t=1

11 hours ago

Pa Ranjith Speech Bison Thanks Meet

https://youtu.be/XH3vQluc4Eo?t=518

11 hours ago

Aaru Arivu Movie Audio Launch | Ambedkar | Thol Thirumavalavan

https://youtu.be/VRvtIfqauzI?t=7

11 hours ago

பைசன் : 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

12 hours ago