SiragadikkaAasai Serial Episode Update 10--7-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா இல்லாததால் அருண் கோபப்பட்டு இப்ப வந்திருக்கிறவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்றது இந்த கல்யாணத்தை இதுக்கு அப்புறம் நடத்த முடியாது நான் போய் மன்னிப்பு கேட்டு எல்லாரையும் கிளம்ப சொல்லி விடுகிறேன் என சொல்ல அண்ணாமலை நீங்க அவசரப்பட்டு கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா இந்த பிரச்சனையே கிடையாது அதே மாதிரி இந்த விஷயத்துலயும் அவசரப்படாதீங்க சீதாவோட அம்மாவ பாருங்க ஏற்கனவே மீனா கல்யாணத்துல நிறைய பிரச்சனை நடந்தது அதே மாதிரி சீதா கல்யாணத்துல நடக்கக்கூடாது நினைச்சாங்க ஆனா இப்ப என் பிரச்சனையா தான் இருக்கு என்று சொல்லுகிறார்.
கொஞ்ச நேரத்தில் சீதா மீனா முத்துவை அழைத்துக் கொண்டு வந்து விடுகின்றனர். முத்து குடித்துவிட்டு இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். செல்வம் மண்டபத்திற்குள் அவரை அழைத்து வந்து நிற்க வைக்க குடும்பத்தினர் அதை வந்துட்டாங்கல்ல போய் தாலி கட்டுங்க என்று சொல்லி உட்கார வைக்கின்றனர் ஆனால் மண்டபத்தில் இருக்கும் அனைவரும் முத்து கொடுத்துவிட்டு வந்திருப்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க ஒரு வழியாக அருணும் சீதாவும் மணமேடையில் உட்காருகின்றனர். ஐயர் மந்திரம் ஓத கொஞ்ச நேரத்தில் இவர்கள் திருமணமும் நடந்து முடிகிறது. உடனே விஜயா கல்யாணம் முடிஞ்சிடுச்சா கிளம்பலாம் என்று அண்ணாமலையை கூப்பிடுகிறார்.
அருண் அம்மா மற்றும் சீதாவின் அம்மா ஆசீர்வாதம் செய்ய சந்திர அண்ணாமலையை கூப்பிட்டு ஆசீர்வாதம் செய்ய சொல்லுகிறார் பிறகு விஜயாவும் அண்ணாமலையும் ஆசீர்வாதம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்தவுடன் முத்துவிடம் எதுவும் பிரச்சினை பண்ணாத என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். குடும்பத்தினர் அனைவரும் கிளம்பி விட மீனா முத்துவை வந்து மேடைக்கு கூப்பிட நான் எதுக்கு வரணும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண அப்பவே சொல்லல இதுக்கு எதுக்கு கூப்பிடுற என்று கேட்கிறார். நான் ஒன்னும் உனக்காக வரல, உன் தங்கச்சி அழுதத அழகாக வந்த இனிமே உன்னோட வீட்டு விஷயத்துல நான் தலையிட மாட்டேன் அதே மாதிரி நீயும் எங்க வீட்டுக்கு வந்து விடாதே என்று சொல்லுகிறார்.
மீனா பேச வர முத்து எதுவும் பேசாத என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் வீட்டில் அனைவரும் வந்து உட்கார்ந்து கொண்டிருக்க அதுக்கு தான் இந்த கல்யாணத்துக்கு போக வேண்டாம்னு சொன்னேன் என்று சொல்லுகிறார். அங்கேயும் குடிச்சுட்டு வந்து அசிங்கப்படுத்தறான் என விஜயா சொல்ல,எனக்கு அவளை தம்பின்னு சொல்லவே பிடிக்கலைப்பா எப்படி குடிச்சிட்டு வந்தான் பாத்தீங்களா என்று மனோஜ் கேட்ட அண்ணாமலை என்ன சொல்லுகிறார்? அதற்கு விஜயா பதில் என்ன? முத்து என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…