கிரிஷ் விஷயத்தில் முத்து எடுத்த முடிவு, என்ன செய்யப் போகிறார் ரோகிணி? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் உட்கார வைத்து முத்து மீனாவும் நடந்த விஷயங்களை பற்றி கேட்கின்றனர்.மீனா நான் அந்த ஸ்கூலுக்கு ஏற்கனவே ஒரு வாட்டி வந்து இருக்கேன் கிரிஷ் ஆனா நீ அந்த ஸ்கூல்ல தான் படிக்கிறேன் எனக்கு தெரியாது என்று சொல்ல நான் உங்கள பார்த்த என்று கிருஷ் சொல்ல கூப்பிட வேண்டியதுதானே என்று மீனா கேட்கிறார் நான் கூப்பிட்டேன் உங்களுக்கு கேட்கவே இல்லை என்று சொல்ல நான் கவனிச்சிருக்க மாட்ட என்று சொல்லுகிறார் உடனே முத்து என்னோட நம்பர் தான் உன்கிட்ட இருக்கு நீ எனக்கு போன் பண்ணி இருக்கலாமே என்று கேட்கிற ஸ்கூல்ல பேரன்ட்ஸும் கார்டியன் கிட்ட மட்டும் தான் பேசணும்னு சொல்லிட்டாங்க என்று சொல்லுகிறார் பிறகு முத்து இந்த நேரத்துல இவனை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனா எங்க அம்மா சும்மா இருக்க மாட்டாங்க அதனால இவன் இங்கே இருக்கட்டும் அதை கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று சொல்ல சந்திராவும் எங்க வீட்டு குழந்தையா பாத்துக்கோ என சொல்லுகிறார். உடனே சீதா இப்போ இவனை காணோன்னு ஸ்கூல்ல தேடிக்கிட்டு இருக்கிறதா சொன்னிங்களே அவங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க மாட்டாங்களா என்று கேட்கிறார்.

உடனே மீனாவும் ஆமாங்க எனக்கு அந்த மேனேஜர் தெரியும் நம்ம நேர்ல போய் என்ன நடந்துச்சு எதனால கிரஷ் இப்படி பண்ணான்ற விஷயத்தை தெரிஞ்சுக்கலாம் என்று முடிவு எடுத்து கிளம்பி வருகின்றனர் மறுபக்கம் ரோகினியும் மகேஸ்வரியும் ஸ்கூலுக்கு வெளியிலேயே காத்துக் கொண்டிருக்க முத்துமீனா கார் வருவதைப் பார்த்து மறைந்து கொள்கின்றனர் பிறகு உள்ளே சென்று முத்து மேனேஜரை சந்தித்து கிரிஷ் எங்க கிட்ட தான் இருக்கான் என்ற விஷயத்தை சொல்லுகிறார் அதற்கு மேனேஜர் நீங்க இங்க கூட்டிட்டு வந்து இருக்கலாமே என்று கேட்க அவன் ரொம்ப பயந்து இருக்கான் நாங்க நாளைக்கா கூட்டிட்டு வருவோம் என்று சொல்லுகிறார். உடனே மேனேஜர் மகேஸ்வரிக்கு போன் போட்டு க்ரிஷ் கிடைத்த விஷயத்தை சொல்ல சந்தோஷப்படுகிறார். பிறகு அவர்களை உடனே வர சொல்ல மகேஸ்வரியும் மேனேஜரை வந்து சந்தித்து பேசுகிறார்.

மகேஸ்வரி உள்ளே வந்தவுடன் மீனா நீங்க வித்யாவோட பிரண்டு தானே என்று கேட்க நான் கிருஷோட அம்மாவுக்கும் பிரண்டு தாங்க என்று சொல்லுகிறார்.பிறகு முத்து கார் டிக்கியில் கிரிஷ் ஒளிந்து கொண்ட விஷயத்தை காப்பாற்றிய விஷயத்தையும் சொல்ல நீங்க கிருஷ் எங்க கூட்டிட்டு வர வேண்டியதுதானே என்று மகேஸ்வரி கேட்கிறார். ஆனா ரொம்ப பயந்து இருக்கானா அவன் நாளைக்கா கூட்டிட்டு வருவேன் என்று சொல்ல,சரி நான் க்ரிஷ் ஓட அம்மா கிட்ட பேசிட்டு வரேன்னு சொல்லி ரோகினிக்கு போன் போடுகிறார் நாளைக்கு கூட்டிட்டு வர்றதா சொல்றாங்க என்று சொல்ல சரி அப்படியே கூட்டிட்டு வரட்டும். நான் வேற ஏதாவது யோசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். உடனே முத்து இப்ப கூட அந்த பொண்ணு வராதா என்று கேட்க வர மாதிரி தான் இருந்தது திடீர்னு வேலை வந்துருச்சு என்று சொல்லுகிறார். பையன விட வேலை தான் ரொம்ப முக்கியமா என்று முத்து கோபப்படுகிறார். பிறகு மேனேஜர் முத்துவின் டீடெயில்ஸ் கலை வாங்க மீனா மகேஸ்வரி இடம் கிரிஷ் மற்றும் அவரது அம்மா பாட்டி பற்றி விசாரித்துவிட்டு அம்மா நம்பர் குடுங்க என்று கேட்க அதெல்லாம் இல்லங்க அவங்களுக்கு கேட்காமல் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே ரோகினி க்ருஷ அங்கிருந்து கூட்டிட்டு வரதுக்கு ஏதாவது பண்ணனுமே என்று யோசித்து வித்யாவிடம் போன் பேசுவது போல வெளியில் ஹாலுக்கு வருகிறார் அங்கு அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது ரோகினி க்ரிஷ் கார்டியன் என்னோட பிரண்டு மகேஸ்வரி தான் என்றும் முத்துமீனா கிருஷ் கூட்டிட்டு வந்திருப்பதாகவும் இதனால் கிரிஷ் அம்மா ரொம்ப கோவமா இருப்பதாகவும் அவங்க ஆக்சன் எடுக்க போறதாகவும் குடும்பத்தினரிடம் சொல்லுகிறார் உடனே விஜயா பின்ன அவ பெத்த புள்ளைக்கு இவங்க சொந்தக் கொண்டா எல்லாம் எப்படி சும்மா இருப்பாங்க என்று சொல்லுகிறார் உடனே முத்து மீனாவும் வந்து வீட்டுக்கு வருகின்றனர் முத்து கிருஷ் என ஆரம்பிக்க அண்ணாமலை கைகாட்டி அமைதியாக இருக்க சொல்லிவிட்டு கிரிஷ் இப்ப எங்க இருக்கான் என்று கேட்க மீனாவோட அம்மா வீட்ல தான் இருக்கான் என்று சொல்லுகிறார் பிறகு நடந்த விஷயங்களை அண்ணாமலை இடம் சொல்லுகிறார்.பிறகு குடும்பத்தினர் என முடிவெடுக்கின்றனர்? அதற்கு முத்து மீனா பதில் என்ன? ரோகினி என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 06-09-25
jothika lakshu

Recent Posts

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

15 minutes ago

Bison – Poison ? Ameer Speech Bison Thanks Meet

https://youtu.be/hvOcBNB9q5M?t=1

2 hours ago

Mari Selvaraj Speech Bison Thanks Meet

https://youtu.be/V8EF1lKofzs?t=1

2 hours ago

Pa Ranjith Speech Bison Thanks Meet

https://youtu.be/XH3vQluc4Eo?t=518

2 hours ago

Aaru Arivu Movie Audio Launch | Ambedkar | Thol Thirumavalavan

https://youtu.be/VRvtIfqauzI?t=7

2 hours ago

பைசன் : 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

4 hours ago