siragadikkaaasai serial episode update 06-02-26
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவிடம் என நடந்தது என்று உண்மையை சொல்லு சீதா என்று சொல்ல சீதா மீனா விடம் அருண் நடந்து கொண்ட விஷயத்தை சொல்லுகிறார் வீட்டில் அருண் அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிற சீதா நீங்க ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் எங்க அம்மா தான் எனக்கு எல்லாமே ஆனா அவங்க இப்ப இல்லை என்று சொல்ல அதற்கு உங்க மாமா தான் காரணம் என்று சொல்லுகிறார் அவர் எப்படி காரணமா இருக்க முடியும் அத்தை இறந்ததில் எனக்கும் வருத்தம் தான் அவங்க எனக்கு அம்மா மாதிரி இருந்தாங்க ஆனா சம்பந்தமே இல்லாம மாமாவுக்கு வர சொல்லிக்கிட்டு இருக்கீங்க ஏன் இப்படி பைத்தியம் மாதிரி பேசுறீங்க என்று சீதா கேட்க அதற்கு அருண் யாரு பைத்தியம்னு சொல்ற என்று சொல்லி கன்னத்தில் அரைகிறார். பிறகு மீண்டும் சீதா உங்கள பைத்தியம்னு சொல்லாம வேற எப்படி சொல்ல முடியும் என்று சொன்னவுடன் மீண்டும் எழுத்து கீழே தள்ள கையில் அடிபட்டு விடுகிறது. இதையெல்லாம் கேட்டா மீனா எதுக்கு அவர் பெற அவரே கெடுத்துகிறார் என்று தெரியவில்லை என்று சொல்லி நீ கொஞ்சம் ஜூஸ் குடி என்று சொல்லிவிட்டு வெளியில் வருகிறார்.
மறுபக்கம் பார்க்கிற்கு மனோஜ் வருவதை கவனித்த ரோகினி உடனே ஒன்றும் தெரியாதது போல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். உடனே மனோஜ் பதுங்கிக் கொண்ட ரோகிணியை பார்த்துக் கொண்டிருக்க வாட்ச்மேன் கவனித்து அங்கு இருப்பவர்களிடம் சொல்லி அவரை பின்தொடர்ந்து வருகிறார். அப்போது சாரில அழகா தான் இருக்கா என்று ரோகினியை ரசித்து பார்த்துக் கொண்டிருக்க உடனே அங்கு இருப்பவர்கள் அந்த புடவை கட்டி இருக்கிற பொண்ணு எப்படி வர்ணித்து பார்க்கிறான் பாருங்க என்று சொல்லி அடிக்கப் போக உடனே ரோகினி வந்து தடுத்து நிறுத்துகிறார். நீங்க ஏன் மேடம் தடுக்குறீங்க இவன் என்ன பண்ண தெரியுமா நீங்க அழகா இருக்கீங்கன்னு வர்ணிச்சி எங்க இருந்தே ரசிச்சுக்கிட்டு இருந்தா என்று சொல்ல மீண்டும் மனோஜ் அடிக்க போகின்றனர்..
உடனே மனோஜ் வாயிலிருந்து அவ என்னோட பொண்டாட்டி தான் என்று சொல்ல உடனே ரோகினி சந்தோஷப்படுகிறார் உடனே அங்கிருப்பவர்கள் இதுல பொய் வேறயா என்று சொல்ல ரோகிணியும் என்னுடைய புருஷன் தான் அவரை விட்டுடுங்க என்று சொல்ல இது மாதிரி ஒரு புருஷனை நான் பார்க்கல என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அனைவரும் சென்று விடுகின்றனர். நீ என்ன மனோஜ் இங்க என்று ரோகினி கேட்க ஒரு போன் வந்தது என்று சொல்லுகிறார் என்ன சொன்னாங்க என்று கேட்க உனக்கு ஆக்சிடென்ட் என்று சொன்னாங்க என்று சொல்ல பார்க்ல எப்படி ஆக்சிடென்ட் ஆகும் என்று ரோகினி கேட்கிறார் என் மேல பாசத்தோட தான எனக்கு என்ன ஆச்சுன்னு பார்க்க வந்த என்று சொல்லுகிறார் உடனே சந்தோஷ் இதெல்லாம் என்னமோ பிளான் மாதிரி இருக்கு என்று சொல்ல அவருக்கு என் மேல பாசம் இருக்கு கண்டிப்பா என்ன புரிஞ்சு பாரு என்று சொல்ல மனோஜ் சென்று வருகிறார்.
மறுபக்கம் மீனா அருணை வீட்டில் சந்தித்து பேசுகிறார் உன் அம்மாவோட இழப்பு உங்களுக்கு பெருசுதானா அதுக்கு காரணம் என் புருஷன் தானே சொல்றதுல எந்த விதத்திலும் நியாயம் கிடையாது உங்களுக்கும் அவருக்கும் மனக்கசப்பு இருக்கிறது உண்மைதான் ஆனால் கொ* பண்ற அளவுக்கு அவரு போறவரு கிடையாது என்று சொல்ல, அந்த செல்வம் முத்து சொல்லி தான் பண்ணி இருப்பான் என்று மீண்டும் அருண் உறுதியாக சொல்ல மீனா உங்களுக்கு சீதா தங்கமான பொண்ணு மனைவியா கிடைச்சிருக்கா உங்களுக்கு அம்மாவா இருந்து உங்கள பார்த்துப்பா ரொம்ப கஷ்டப்பட்டு உங்கள கல்யாணம் பண்ணா நீங்க அவள புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு இந்த விஷயம் சீதாவுக்கு தெரிய வேணாம் சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் விஜயா வக்கீலை சந்தித்து விட்டு வீட்டுக்கு வர அண்ணாமலை என்ன கேட்கிறார்? அதற்கு முத்து மீனா என்ன சொல்லுகின்றனர்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
[Best_Wordpress_Gallery id="1047" gal_title="Blast Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1043" gal_title="Fahadh Faasil and C Prem Kumar New Movie Launch"]
[Best_Wordpress_Gallery id="1041" gal_title="Poo Kaai Kani Movie Pooja Stills"]
[Best_Wordpress_Gallery id="1039" gal_title="Athiradi Movie Pre Release Event"]
[Best_Wordpress_Gallery id="1037" gal_title="Sattendru Maarudhu Vaanilai Pre-Release Event"]