பார்வதி எடுத்த முடிவு, விஜயாவை திட்டிய மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவுடனான உறவை பார்வதி முடித்துக் கொண்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதியின் மகனை வர வைத்து விட அவரும் பார்வதி இடம் தரக்குறைவாக பேசுகிறார் மறுபக்கம் முத்து மீனாவையும் வரவைத்து விட பார்வதி சிவனுடன் சேர்த்து வைத்து பேச ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்த பார்வதி மகனை கன்னத்தில் ஓங்கி வரைந்து விடுகிறார். என்னடா நீ பேசிகிட்டு இருக்க இத்தனா நாள் கழிச்சு நீ எதுக்காக தான் வந்தியா ஒரு அம்மா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா என்று சொல்ல எல்லாம் உன்னோட பிரண்டு சொல்லித்தான் நான் வந்தேன் என்று சொல்லி விஜயாவை போட்டுக் கொடுத்து விடுகிறார்.

உடனே முத்துவும் பார்வதி மகன் பேசிய பேச்சை தாங்க முடியாமல் அவரும் அறைந்து விடுகிறார். என்னடா பேசிக்கிட்டு இருக்க நீ பார்வதி அத்தையோட குணம் குழந்தை மாதிரி அவங்க ஒருத்தருக்கும் கெடுதல் நினைக்க மாட்டாங்க அவங்கள போய் நீ இப்படி பேசிக்கிட்டு இருக்க நீ பேசின வார்த்தை உங்களை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் தெரியுமா இவ்வளவு நாளா நீ அவங்க தனியா இருக்காங்க என்ன சாப்பிடுறாங்க என்ன மாத்திரை போடுறாங்கன்னு கூட உனக்கு தெரியாது இதைக் கேட்டவுடன் அப்படியே ஓடி வந்துட்டியா என்று திட்டுகிறார். இது எங்க குடும்ப விஷயம் இப்போ கூட அந்த ஆள வெளியே அனுப்புமா உனக்கு அவர் முக்கியமா நான் முக்கியமா என்று கேட்க முத்து அத்தை நீங்க உங்க மனசுக்கு எதுன்னு சரியா படுதோ அந்த விஷயத்தை பண்ணுங்க இப்ப கூட அவன் யார் வேணும் சொல்லு நான் கிளம்புறேன்னு சொல்றான் ஆனா உங்க கூட யாரு அன்பா இருப்பாங்களோ அவங்கள நீங்க வச்சுக்கோங்க என்று சொல்ல ஒரு கட்டத்திற்கு மேல் பார்வதியும் அழுகையை நிறுத்திவிட்டு மகனிடம் நீ என்ன இது மாதிரி ஒரு வார்த்தை சொல்லி அசிங்கப்படுத்திட்ட இல்ல என்று கேட்கிறார்.

இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல உனக்கு என்னால அசிங்கமா இருக்கு நான் என்ன அம்மாவா ஏத்துக்க வேண்டாம் போயிடு என்று சொல்லுகிறார். உடனே சிவன் நான் வேணும்னா போய் விடவா என்று கேட்க வேண்டாம் சிவம் நீங்க இருங்க நம்மளோட நட்பு நம்மளுக்கு தெரியும் நம்மளுக்குள்ள இருக்கிற பிரண்ட்ஷிப்போட அர்த்தம் என்னன்னு நம்மளுக்கு தெரிஞ்சா போதும் மத்தவங்களுக்கு தெரியணும்னு அவசியமும் கிடையாது உனக்கு எப்போ என் மேல தப்பு இல்லன்னு தோணுதோ அப்ப இந்த அம்மாவை பார்க்கவா என்று சொல்ல அப்போ உனக்கு கொல்லி போட கூட ஆள் இருக்க மாட்டாங்க என்று சொல்ல எனக்கு உன் பாசமா இருக்கிற முத்து மீனாவும் இருக்காங்க என்று சொல்ல பார்வதியின் மகன் சென்று விடுகிறார் உடனே பார்வதி கோபமாக விஜயாவை கூப்பிடுகிறார். என் வாழ்க்கையில் நான் செஞ்ச தப்பு உன்னோட ப்ரெண்ட்ஷிப் தான் நீ எவ்வளவு தப்பு பண்ணினாலும் நான் உங்க கூட சப்போர்ட்டுக்கு நில்லுங்க என நீ என்னோட பிரண்டுவதற்காக தான் ஆனா நீ என்னை நம்பல உன்ன மாதிரி ஒரு பிரண்ட்ஷிப் எனக்கு தேவையில்லை என்று சொல்லி விடுகிறார்.

இதுக்கப்புறம் நீ இங்க எந்த கிளாஸ்வும் நடத்த தேவையில்ல நீ எதுவும் பேசத் தேவையில்லை இங்கிருந்து போயிடு நீ உனக்கு எனக்கு என்ன சம்பந்தமும் இல்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறார். பிறகு விஜயா வீட்டில் என்ன சொல்லுகிறார்? குடும்பத்தினர் என்ன கேட்கின்றனர்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 25-12-25
jothika lakshu

Recent Posts

Bhagavan Movie Stills

[Best_Wordpress_Gallery id="1035" gal_title="Bhagavan Movie Stills"]

1 day ago

Breakfast Movie Audio Launch

[Best_Wordpress_Gallery id="1034" gal_title="Breakfast Movie Audio Launch"]

1 day ago

Light Weight Baby Title Launch

[Best_Wordpress_Gallery id="1033" gal_title="Light Weight Baby Title Launch"]

1 day ago

LIK Thanks Giving Meet

[Best_Wordpress_Gallery id="1032" gal_title="LIK Thanks Giving Meet"]

1 day ago

“நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை” – திருமணம் குறித்து ரித்விகா திறந்த மனம்

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற நடிகை Riythvika, தனது திருமணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த…

1 day ago

பின்னணி பாடகி Dhee இசை ஆல்பம் – ஏப்ரல் 24ல் கொழும்புவில் வெளியீடு

இலங்கையைச் சேர்ந்தும் தமிழர் பண்பாட்டு வேர்களை தன்னகத்தே கொண்டும் உலக இசை ரசிகர்களை கவர்ந்த குரலாக திகழ்கிறார் Dhee. தனித்துவமான…

1 day ago